டெல்லி: 2016ஆம் ஆண்டில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும், அதுமட்டும் அல்லாமல் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் முதன்மையான இடத்தைப் பெறும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் 2016ஆம் ஆண்டுக்கான குளோபல் எக்னாமிக் பிராஸ்பெக்டஸ் என்னும் தலைப்பில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து முக்கிய ஆய்வுகள் செய்யப்பட்டது.
இதில் 2016ஆம் ஆண்டில் உலகின் 2வது பொருளாதார நாடாக விளங்கும் சீனாவை விடவும் சிறப்பான வளர்ச்சியை இந்தியா அடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
2016இல் இந்தியா
2016ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த பொருளாதார வளர்ச்சியின் அளவு 7.8 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் சர்வதேச பொருளாதாரம் 2.9 சதவீதம் வரை உயரும் எனவும் உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 2.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டில் கணிப்புகளின் அளவு உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சீனா
2016ஆம் ஆண்டில் சீனாவின் மந்த பொருளாதாரச் சூழ்நிலைகளில் இந்தியாவை விடவும் குறைவாக அதாவது 6.7 சதவீதம் வரை மட்டுமே உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
பிற நாடுகள்
இந்நிலையில் வங்காளதேசம் 6.7 சதவீதமாகவும், பாகிஸ்தான் 5.5 சதவீதமாகவும் இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் 2016ஆம் ஆண்டில் தென் ஆசிய நாடுகள் தான் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளது உலக வங்கி.
பிரிக்ஸ் நாடுகளின் கதி
இதே காலக்கட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சியைப் பார்க்கும்போது, சர்வதேச கமாடிட்டி விலை நிலைகளின் மூலம் ரஷ்யாவின் வளர்ச்சி 0.7% குறையும் எனவும், பிரேசிஸ் 2.5 சதவீதம் வரையிலான வளர்ச்சி குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தென் ஆப்பிரிக்காவின் வளர்ச்சி மட்டும் 1.4 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளரும் சந்தைகள்
கணிப்புகளையும் தாண்டி அதிகளவில் வீழ்ச்சி அடையும் சீன சந்தையால் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகளவில் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
சிஎஸ்ஆர்
குளோபல் எக்னாமிக் பிராஸ்பெக்டஸ் ஆய்வறிக்கையில், உலக நாடுகளில் இந்தியாவில் மட்டும் தான் சிஎஸ்ஆர் எனப்படும் கார்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி சேவையில் செலவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 500 கோடி ரூபாய் மதிப்புடைய அல்லது 1000 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் அல்லது 5 கோடி ரூபாய் லாபம் பெறும் நிறுவனங்கள் கட்டாயமாக 2 சதவீத பணத்தைச் சிஎஸ்ஆர் பணியில் செலவு செய்ய வேண்டும்.
More From GoodReturns

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications