ரூ.5,000 கோடி மதிப்பில் ராணுவ கப்பல் கட்டுமான தளம்.. அனில் அம்பானியின் புதிய திட்டம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விசாகபட்டினம்: ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலங்கானா தனியாகப் பிரிக்கப்பட்ட பின், புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்காக ஆந்திர அரசு போராடி வந்த நிலையில், தனது விடா முயற்சி மற்றும் தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் தற்போது நிறுவனங்கள் ஆந்திர மாநிலத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்நிலையில் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குரூப் 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ராணுவ கப்பல் கட்டுமான தளம் அமைக்க அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

விசாகபட்டினத்தில் கடந்த 3 நாட்களாக நடந்த சிஐஐ பார்ட்னர்ஷிப் சுமிட் மற்றும் சன்ரைல் ஏபி இன்வெஸ்ட்மென்ட் ஆகியவை இணைந்து நடத்திய முக்கியமான வர்த்தகச் சந்திப்பில் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திடத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி மற்றும் ஆந்திர மாநில முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயடு ஆகியோர் கையெழுத்திட்டனர்.

 ராம்பில்லி

ராம்பில்லி

இதுக்குறித்து அனில் அம்பானி கூறுகையில், ஆந்திர மாநிலம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து துவங்க உள்ள இப்புதிய தொழிற்சாலை, விசாகபட்டினத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராம்பில்லி பகுதியில் அமைய உள்ளது.

பிரிவு

பிரிவு

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா பிரிவிற்குப் பின் ஆந்திராவில் செய்யப்பட்டு இருக்கும் மிகப்பெரிய முதலீடு இதுவே. ஆகையால் ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திர பிரதேச அரசின் வர்த்தக வளர்ச்சி குறித்த நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இந்திய கப்பல் படை

இந்திய கப்பல் படை

இந்திய கப்பற்படை புதிய கப்பல் வாங்குவதற்காகவும், பழுது சரிபார்க்கவும் வருடத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாயைச் செலவு செய்கிறது. இந்நிலையில், அடுத்த 15 வருடத்தில் இத்துறையில் செலவிடப்படும் தொகையை 80 சதவீதம் வரையில் குறைக்கும் வரையில் மேக் இன் இந்தியா திட்டத்தில் கீழ் மத்திய அரசு புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.

இந்த வாய்ப்புகளைக் கவரவே ரிலையன்ஸ் நிறுவனம் முன்கூடியே 5000 கோடி ரூபாய் அளவில் மிகப்பெரிய முதலீட்டை ஆந்திராவில் செய்துள்ளது.

 

வேலையவாய்ப்புகள்

வேலையவாய்ப்புகள்

இப்புதிய தொழிற்சாலையின் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என அனில் அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மொத்த முதலீடு

மொத்த முதலீடு

இத்தொழிற்சாலையில் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள அனில் அம்பானி, வரிவாக்க பணிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட வர 10,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது ரிலையன்ஸ் குழுமம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance to set up Rs. 5,000-crore naval shipbuilding unit near Vizag

Reliance Group, led by billionaire Anil Ambani, will set up a naval ship-building facility near Visakhapatnam at a cost of Rs. 5,000 crore. It is the single biggest investment in Andhra Pradesh after its bifurcation.
Story first published: Monday, January 11, 2016, 12:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X