மும்பை: நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டாளரின் நம்பிக்கையை, வலுப்படுத்தும் விதமாகப் பின்னி பன்சால் புதிய சீஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனத்தின் சீஇஓ-வாக இருந்த சச்சின் பன்சால் தற்போது நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிளிப்கார்ட்
15 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் அமேசான் நிறுவனத்தின் வருகையாலும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் ஸ்னாப்டீல் ஆதிக்கத்தால் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்துள்ளது.
இந்நிலையில் நிர்வாகக் குழுவில் செய்த புதிய மாற்றத்தின் மூலம் இனி பிளிப்கார்ட் புதிய வடிவமைப்பில் உருவாகும் எனத் தெரிகிறது.
தலைமை மாற்றம்...
இந்நிறுவனத்தின் சீஇஓவாக இருந்த சச்சின் பன்சால் தற்போது நிர்வாகத் தலைவராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், இனி சிஇஓ பதவியில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஓஓ-வான பின்னி பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முகேஷ் பன்சால்
இந்நிலையில் ஆன்லைன் ஆடை விற்பனை தளமான மின்திரா நிறுவனத்தைப் பிளிப்கார்ட் நிறுவனம் கைபற்றிய பின் இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் பன்சால் பிளிப்கார்டின் காமர்ஸ் பிளாட்பார்ம் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
தற்போது செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாக மாற்றங்களில் இனி முகேஷ் பன்சால் கூடுதலாக விளம்பர வர்த்தகத்திற்குத் தலைமை வகிப்பார் எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
பின்னி பன்சால்
பின்னி சீஇஓவாக நியமிக்கப்பட்ட நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்திற்கும் செயல்பாட்டிற்கும் முழுப் பொறுப்பு பின்னி பன்சால் தான்.
புதிய பொறுப்புகள்
இனி காமர்ஸ், ஈகார்ட், மின்திரா பிரிவுகளை நேரடியாகக் கவனிக்க உள்ளார். அதுமட்டும் அல்லாமல் கார்பரேட் செயல்பாடுகள், மனிதவள பிரிவு, நிதியியல், சட்டம், கார்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் கார்பரேட் வளர்ச்சி ஆகியவற்றையும் கூடுதலாகக் கவனிக்க உள்ளார் பின்னி பன்சால்.
அமேசான் வருகை
இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் வருகையில் மிகப்பெரிய தாக்கத்தைப் பிளிப்கார்ட் சந்திக்கவில்லை என்றாலும், கடந்த சில வருடங்களில் நாட்டின் முக்கியப் பெருநகரங்களில் உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கையில் பிளிப்கார்ட் நிறுவனத்தை ஓரம் கட்டி அமேசான் முன்னிலை வகித்து வருகிறது.
இதனால் பெரு நகரங்களில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஸ்னாப்டீல்
அதேபோல் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் வர்த்தகம் ஆதிக்கம் செலுத்துவதால், இத்தகைய சந்தையிலும் பிளிப்கார்ட் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் தொடர்ந்து வர்த்தகச் சரிவை அடைந்து வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications