மும்பை: அனில் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 800 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை தாராளமயப்படுத்த தொலைத்தொடர்பு அமைச்சகம் 5,500 கோடி ரூபாய் கோரியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
இந்நிறுவனத்திற்குச் சொந்தமான 800 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை இந்தியாவில் 16 வட்டங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஸ்பெக்ட்ரத்தை தாராளமயப்படுத்த தொலைத்தொடர்பு துறையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் டிசம்பர் மாத துவக்கத்தில் அணுகியது.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 4ஜி மற்றும் தொலைத்தொடர்பு சேவையை இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் அறிமுகச் செய்யத் திட்டமிட்டுள்ளதால் இந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, பல வருடங்களுக்குப் பின் தனது தம்பி அனில் அம்பானியுடன் மீண்டும் இணைய உள்ளார்.
டிரேடிங் மற்றும் ஷேரிங்
இதன் படி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 800 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை டிரேடிங் மற்றும் ஷேரிங் முறையில் பயன்படுத்த இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளது.
தாராளமயப்படுத்தவதற்கான கோரிக்கையை விசாரித்த தொலைத்தொடர்பு துறை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை அடுத்த ஒரு மாதத்திற்குள் 5,500 கோடி ரூபாய் செலுத்த அறிவித்துள்ளது.
20 வட்டங்கள்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு துறையிடம் கோரியது 20 வட்டங்கள், ஆனால் இத்துறை வெறும் 16 வட்டங்களில் மட்டுமே தாராளமயப்படுத்த தற்போது அனுமதி அளித்துள்ளது.
கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் கோரப்பட்ட விலை அளவுகள் சந்தை விலைக்குக் குறைவாக உள்ளதால் இந்த 4 வட்டங்களில் அனுமதி அளிப்பது குறித்த முடிவுகளை எடுக்கத் தொலைத்தொடர்பு துறை டிராய் அமைப்பின் உதவியை நாடியுள்ளது.
ஜியோ நிறுவனம்
4ஜி மற்றும் தொலைத்தொடர்பு சேவையை அறிமுகம் செய்வதிலும், டிரேடிங் மற்றும் ஷேரிங் விவகாரத்தில் முக்கியக் கட்ட பேச்சுவார்த்தையில் நிர்வாகம் உள்ளது என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications