அண்ணன் முகேஷ் உடன் சேர 5,500 கோடி ரூபாய் கேட்டும் தொலைத்தொடர்பு துறை..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அனில் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 800 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை தாராளமயப்படுத்த தொலைத்தொடர்பு அமைச்சகம் 5,500 கோடி ரூபாய் கோரியுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

இந்நிறுவனத்திற்குச் சொந்தமான 800 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை இந்தியாவில் 16 வட்டங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஸ்பெக்ட்ரத்தை தாராளமயப்படுத்த தொலைத்தொடர்பு துறையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் டிசம்பர் மாத துவக்கத்தில் அணுகியது.

 

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 4ஜி மற்றும் தொலைத்தொடர்பு சேவையை இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் அறிமுகச் செய்யத் திட்டமிட்டுள்ளதால் இந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, பல வருடங்களுக்குப் பின் தனது தம்பி அனில் அம்பானியுடன் மீண்டும் இணைய உள்ளார்.

டிரேடிங் மற்றும் ஷேரிங்

டிரேடிங் மற்றும் ஷேரிங்

இதன் படி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 800 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை டிரேடிங் மற்றும் ஷேரிங் முறையில் பயன்படுத்த இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளது.

தாராளமயப்படுத்தவதற்கான கோரிக்கையை விசாரித்த தொலைத்தொடர்பு துறை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை அடுத்த ஒரு மாதத்திற்குள் 5,500 கோடி ரூபாய் செலுத்த அறிவித்துள்ளது.

 

20 வட்டங்கள்

20 வட்டங்கள்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு துறையிடம் கோரியது 20 வட்டங்கள், ஆனால் இத்துறை வெறும் 16 வட்டங்களில் மட்டுமே தாராளமயப்படுத்த தற்போது அனுமதி அளித்துள்ளது.

கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் கோரப்பட்ட விலை அளவுகள் சந்தை விலைக்குக் குறைவாக உள்ளதால் இந்த 4 வட்டங்களில் அனுமதி அளிப்பது குறித்த முடிவுகளை எடுக்கத் தொலைத்தொடர்பு துறை டிராய் அமைப்பின் உதவியை நாடியுள்ளது.

 

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

4ஜி மற்றும் தொலைத்தொடர்பு சேவையை அறிமுகம் செய்வதிலும், டிரேடிங் மற்றும் ஷேரிங் விவகாரத்தில் முக்கியக் கட்ட பேச்சுவார்த்தையில் நிர்வாகம் உள்ளது என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DoT to RCOM: Pay Rs 5.5k cr to liberalize 800MHz spectrum

The government has sought about Rs 5,500 crore from Anil Ambani's telecom venture Reliance Communications (RCOM) for liberalizing the company's 800 MHz spectrum across 16 circles.
Story first published: Wednesday, January 13, 2016, 13:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X