டெல்லி: 2017ஆம் நிதியாண்டு துவங்க உள்ள நிலையில், இந்திய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டு ஊதிய உயர்வு குறித்து ஆய்வு செய்த போது, இந்தியாவில் ஈகாமர்ஸ், லைப் சைன்ஸ், மீடியாவின் வளர்ச்சி மற்றும் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், இந்த வருடம் இந்திய நிறுவனங்கள் தாராளமாக 10 சதவீத ஊதிய உயர்வை அளிக்கும் என ஆய்வின் முடிவுகள் தெரிய வந்துள்ளது.
எல்லோருக்கும் 10% ஊதிய உயர்வு இல்லைங்க.. சில துறைக்கு இன்னும் அதிகமாம்.. வாங்க முழுமையான விபரங்களைத் தெரிந்துகொள்வோம்.
ஆய்வு
Aon Hewitt என்ற நிறுவனம் இந்தியாவில் சுமார் 700 நிறுவனங்கள் மத்தியில் செய்த ஆய்வில் ஈகாமர்ஸ், லைப் சைன்ஸ், மீடியா நிறுவனங்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 15.6 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
700 நிறுவனங்கள்
கடந்த சில வருடங்களாக இந்திய பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில், இந்திய நிறுவனங்கள் தங்களது நிறுவனம் மற்றும் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளத் திறமையான ஊழியர்களுக்குச் சம்பத்தை வாரி வழங்கத் தயாராக உள்ளது என 700 நிறுவனங்களில் செய்யப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
15.6% ஊதிய உயர்வு
இந்த வரும் ஈகாரமர்ஸ் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஊழியர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வர வைக்கும் அளவிற்கு 15.6 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கத் தயாராக உள்ளது.
மீடியா
ஈகாரமர்ஸ் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடர்ந்து இண்டர்நெட் மற்றும் சாமானிய மக்கள் மத்தியிலும் ஆதிக்கம் செலுத்தும் மீடியா (ப்ரின்ட் மற்றும் எலக்ட்ரானிக்) நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு 11.2 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
11-10 சதவீத உயர்வு
அதேபோல் கன்சியூமர் பிராடெக்ட்ஸ் (10.8%), ரிடைல் (10.7%), ITeS(10.3%), டெலிகாம் (9.7%) மற்றும் நிதியியல் நிறுவனங்கள் 8.8 சதவீதம் வரை ஊதியத்தில் உயர்வு அளிக்கத் தயாராக உள்ளது.
இரண்டு இலக்க உயர்வு
2007, 2008 மற்றும் 2015ஆம் ஆண்டுகளைப் பார்க்கும் போது 15.1%, 13.1%, 10.4% வரையிலான உயர்வு அளிக்கப்பட்டுள்ளது, இதனால் இந்தியாவில் மட்டும் அல்லாமல் ஆசிய பசிபிக் பிராந்தியங்களிலும் நிலவும்.
இதன் மூலம் நாம் வர்த்தகத்திலும், பொருளாதாரத்திலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதை மிகத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
பணவீக்கம்
மேலும் நாட்டின் நிலவும் குறைவான பணவீக்கமும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதிய உயர்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
7வது சம்பள கமிஷன்
ஊழியர்களின் ஊதிய உயர்வில் பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியும் முக்கியப் பங்கு வகித்தாலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதிய உயர்வு குறித்த 7வது சம்பள கமிஷன் அறிக்கை வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முறை பதவி உயர்வு.. இதுக்கு மேல என்ன வேண்டும் சொல்லுங்க..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications