டெல்லி: மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்த நோக்கிய நிறுவனம் தனது வர்த்தகம் சரிவால் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்து தனது மொபைல் வர்த்தகம், மொபைல் தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் சில முக்கியத் தொழில்நுட்பகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.
இந்நிலையில் நோக்கியா நிறுவனம் டெலிகாம் துறை சார்ந்த வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அல்காடெல் லூசென்ட் நிறுவனத்தைக் கைப்பற்றியது.
நோக்கியா
நோக்கியா - அல்காடெல் லூசென்ட நிறுவன இணைப்பால் அல்காடெல் லூசென்ட் நிறுவனத்தின் இந்திய கிளைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கணிசமாகப் பாதிக்கப்படுவார்கள் என நோக்கியா சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தது.
பணிநீக்கம்
தற்போது இரு நிறுவனங்களின் இந்திய கிளைகளில் பணிபுரியும் சுமார் 20,000 ஊழியர்கள் மத்தியில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக நோக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இப்பணிநீக்கம் பெரும்பானவை நோக்கியா நிறுவனம் மட்டும் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனவே பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படப்போவது நோக்கியா நிறுவன ஊழியர்கள் தான்.
சந்தீப் கிரோத்ரா
இதுகுறித்து நோக்கிய நிறுவனத்தின் இந்திய வர்த்தகத் துணை தலைவர் சந்தீப் கூறுகையில், நிறுவன நடவடிக்கைகள் சிலவற்றை நாம் தவிர்க்க முடியாது. என்று தெரிவித்தார்.
15.6 பில்லியன் டாலர்
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நோக்கியா அல்காடெல் லூசென்ட் நிறுவனத்தை 15.6 பில்லியன் டாலருக்கு கைப்பற்ற உள்ளதாகத் தெரிவித்தது. தற்போது நிறுவன கைப்பற்றும் நடவடிக்கை முழுமையாக முடிந்துள்ளது. இவை அனைத்தும் பங்கு பரிமாற்ற வாயிலாகவே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
91% பங்குகள்
தற்போதைய நிலையில் நோக்கியா நிறுவனம் அல்காடெல் லூசென்ட் நிறுவனத்தின் 91 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications