டெல்லி: இந்தியாவில் கோடைக் காலத்தில் அதிகளவில் வியாபாரத்தைப் பார்க்கும் பெப்ஸி, கோக்க கோலா போன்ற குளிர்பான நிறுவனங்கள் கடந்த 2 வருடமாகக் குறைந்த அளவிலான வர்த்தகத்தை மட்டுமே பார்த்தது.
இதனால் 2016ஆம் ஆண்டின் கோடை கால விற்பனையை மூடுக்கிவிடவும் , அதிகளவிலான விற்பனை செய்யவும் பெப்ஸி, கோக்க கோலா நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்கள் மினி கேன் குளிர்பானங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
மினி கேன்
இதன் பிடி பெப்ஸி நிறுவனம் 150மிலி அளவு கொண்ட மினி கேன் வடிவிலான குளிர்பானத்தை 15 ரூபாய்க்கும், கோக்க கோலா நிறுவனம் தனது தயாரிப்பான கோக்க கோலா மற்றும் தம்ஸ்-அப் ஆகியவற்றை 180 மிலி கேன் வடிவில் 20 ரூபாய்க்கும் அறிமுகம் செய்துள்ளது.
பெப்ஸி கோ
இதுகுறித்துப் பெப்ஸி நிறுவனத்தின் துணைத் தலைவர் விபுல் பிரகாஷ் கூறுகையில், இப்புதிய திட்டத்தை முதல்கட்டமாக இந்தியாவின் நகரம் மற்றும் சிறிய நகரங்களில் செயல்படுத்தவும், 2வது கட்டமாக இந்தியா கிராமங்களுக்குக் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளோம் எனக் கூறினார்.
இந்திய வர்த்தகம்
மேலும் பிரகாஷ் கூறுகையில் இந்தியாவில் எங்களது மொத்த வர்த்தகத்தில் 30 சதவீதம் கண்ணாடி பாட்டில் வடிவிலானது. இப்புதிய மினி கேன் அறிமுகத்தின் மூலம் கண்ணாடி பாட்டில் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மீதமுள்ள 70 சதவீத வர்த்தகம் பெட் பாட்டில் மூலம் செய்யப்படுவதாக அவர் கூறினார்.
உற்பத்தி
பெப்ஸி நிறுவனம் தற்போது வெளியீட்டு வரும் அனைத்து கேன்களும் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை அடுத்த 2 அல்லது 3 வருடங்களில் இதன் உற்பத்தியை இந்தியாவிலேயே செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் விபுல் பிரகாஷ் கூறினார்.
முதலீடு
2020ஆம் ஆண்டுக்குள் விற்பனையை இரண்டு மடங்கு வரை உயர்த்த 30,000 ரூபாய் வரை இந்சிய சந்தையில் முதலீடு செய்வதாகக் கோக்க கோலா நிறுவனம் 2012ஆம் ஆண்டு அறிவித்தது.
அதேபோல் சக போட்டி நிறுவனமான பெப்ஸி கோ நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிப்பதற்காக 33,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக 2013ஆம் ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications