2015-16ஆம் நிதியாண்டில் பங்குச்சந்தை முதலீடு மூலம் நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி சுமார் 11,000 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் மற்றும் 2016ஆம் நிதியாண்டின் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் முக்கியமான நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் சுமார் 11,000 கோடி லாபம் ஈட்டியுள்ளோம் என்று எல்ஐசியின் முதலீட்டுப் பிரிவு செயல் இயக்குநர் பிரவீண் குதும்பே தெரிவித்தார்.
2015-16ஆம் நிதியாண்டின் 12 மாதத்தில் பங்குச்சந்தையில் சுமார் 2.70 லட்சம் கோடி ரூபாயை இந்திய கடன் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டது. இதில் 65,000 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டது.
கடந்த நிதி ஆண்டில் (2014-15) 55,000 கோடி ரூபாயை எல்.ஐ.சி. பங்குச்சந்தையில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
2015-16 நிதியாண்டில் பங்குச்சந்தை 10 சதவீதம் சரிந்திருக்கின்றன.