டெல்லி: உலகின் மிகப்பெரிய மொபைல் விற்பனை நிறுவனமாகத் திகழும் ஆப்பிள், இந்திய சந்தையில் அதிகளவிலான மொபைல்களை விற்பனை செய்ய முடியாத காரணத்தால் தனது புதிய ஐபோன்களை வாடகைக்கு விடத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், இந்தியர்கள் மத்தியில் ஐபோன் புழக்கத்தை அதிகரிக்க, கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களை மையமாகக் கொண்டு வாடகை ஐபோன் திட்டத்தை வடிவமைத்துள்ளது.
ஐபோன் எஸ்ஈ
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகமான ஐபோன் எஸ்ஈ மாடல் போனை 2 வருட ஒப்பந்த திட்ட அடிப்படையின் கீழ் மாதம் 999 ரூபாய் வாடகைக்கு வாடகைக்கு அளிக்க உள்ளது.
ஐபோன் 6 மற்றும் 6எஸ்
இந்நிறுவனத்தின் அதிக விலைகொண்ட மொபைல் போனாகக் கருதப்படும் ஐபோன் 6 மற்றும் 6எஸ் 2 வருட ஒப்பந்த திட்ட அடிப்படையின் கீழ் மாதம் 1,199 மற்றும் 1,399 ரூபாய்க்கு ஐபோன்களை வாடகைக்கு அளிக்க உள்ளது.
பயன்பாடு..
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஆடம்பர சந்தை வளர்ச்சி மிகவும் குறைவு. இந்நிலையில், மக்கள் மத்தியில் ஆப்பிள் நிறுவன பொருட்களின் பயன் பாட்டை அதிகரிக்க இந்நிறுவனம் இத்தகைய திட்டங்களை அறிவித்துள்ளது.
விளம்பரம்
இப்புதிய வாடகை திட்டங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விதமாக ஆப்பிள் நிறுவனம் இன்று செய்தித்தாள்களில் விளம்பரம் செய்திருந்தது.
மாற்றக்கூடிய வசதி உண்டு..
இந்த 2 வருட காலத்தில் ஒரு தங்களது விருப்பத்தின் படி எந்த ஐபோன் 6, 6எஸ் மற்றும் ஐபோன் எஸ்ஈ மாடல் போன்களில் எதை வேண்டும் என்றாலும் மாற்றிக்கொள்ளலாம்.
மோசமான திட்டம்...
இன்றைய நிலையில் ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் ஐபோன் 6எஸ் போனின் (16ஜிபி, ரோஸ் கோல்டு) விலை 45,999 ரூபாய்.
2 வருட ஒப்பந்தத்தின் கீழ் மாதம் 1,399 ரூபாய் வாடகை என்றால்
ரூ.1,399 x 24= 33,576 ரூபாய். இதில் வாடிக்கையாளர்களுக்குச் சுமார் 12,000 ரூபாய் லாபம் கிடைத்தாலும், ஒப்பந்தம் காலம் முடிந்த பிறகு நாம் மொபைல் போனை திருப்பிச் செலுத்த வேண்டும். சந்தையில் 2 வருடப் பழமை ஐபோனுக்குக் குறைந்தது 15,000 ரூபாய் கிடைக்கும் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.
அமெரிக்ககாரன்..
இந்திய கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களை முட்டாள்கள் எனக் கணக்குப் போட்டான் போல ஆப்பிள். நாங்க எல்லாம் யாரு.. போடா டேய்..!