டெல்லி: அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் ஆக்சிஸ் வங்கியின் அன்னிய முதலீட்டு உயர்வு உட்படச் சுமார் 13,030 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் வகையில், 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தின் ஆய்வில் வந்த 14 ஒப்புந்தங்களில் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சுமார் 5 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் ஆக்சிஸ் வங்கியின் அன்னிய முதலீட்டு அளவை 62 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு FIPB ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அன்னிய முதலீட்டுத் தளர்வுகள் படி இனி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் 49 சதவீத அன்னிய முதலீட்டு அளவை 74 சதவீதமாக அறிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் பார்மா நிறுவனங்களான Wockhardt மற்றும் அரூபிந்தோ ஆகிய நிறுவனங்களின் திட்டங்களும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2015-16ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் இந்திய சந்தையில் சுமார் 29.44 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீடு குவிந்துள்ளது.


Click it and Unblock the Notifications