விஜயவாடா: தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின், ஆந்திர பிரதேசம் தனது மாநில வளர்ச்சிக்குத் தேவையான புதிய திட்டங்கள், புதிய தலைநகரம், முக்கியக் கட்டுமானங்கள், புதிய தொழிற்சாலைகளுடன் கூட்டு எனப் பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்து வருகிறது. இதற்கு அனைத்துக்கும் மத்திய அரசு முழுமையான ஒத்துழைப்பு அளித்தும் வருகிறது.
இந்நிலையில் உலக நாடுகளில் இருக்கும் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த மக்களிடம் தங்களது மாநில வளர்ச்சி பணிகளுக்கான நிதியை திரட்டும் விதிமாக, ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு "பிராண்ட் ஏபி" (Brand AP) என்பதன் கீழ் என்ஆர்ஐ போல் என்ஆர்டிஎஸ் (Non-Resident Telugu Society) என்னும் புதிய சமுகத்தையே உருவாக்க உள்ளார்.
என்ஆர்டிஎஸ் சமுகம் மற்றும் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மூலம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டவே பிராண்ட் ஏபி-யை உருவாக்கியுள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இப்புதிய தளத்தில் மூலம் வெளிநாடுகளில் வாழும் தெலுங்கர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்கவும், பிற என்ஆர்ஐ மக்கள் மத்தியிலான சமுக மற்றும் கலாச்சார இணைப்பை வலுப்படுத்த முடியும் எனவும் சந்திரபாபு நம்புகிறார்.
Non-Resident Telugu Society அமைப்பின் தலைமை அலுவலகம் விஜயவாடாவில் அமைக்கப்பட உள்ளது.
இந்த அமைப்பின் முதலமைச்சர் தலைமையிலான 10 நிர்வாகக் குழு உறுப்பினர், இதில் என்ஆர்ஐ விவகார துறை அமைச்சர் ஆகியோரும் அடக்கம்.