ஏப்ரல் மாதத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 21% உயர்வு..!

டெல்லி: இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதற்கு முக்கிய ஆதாரம் இந்த ஏப்ரல் மாதம்.

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை எப்போது இல்லாத அளவில் சுமார் 21 சதவீதம் அதிகரித்துள்ளது என DGCA எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 21% உயர்வு..!

இதில் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 79.32 லட்சமாக உயர்ந்துள்ளது, கடந்த வருடம் இதே காலக்கட்டதில் மாதம் இதன் அளவு 65.59 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏப்ரல் மாதத்தில் இண்டிகோ நிறுவனம் சுமார் 30.67 லட்ச பயணிகளுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை அளித்து, சந்தையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது.

இதன் மூலம் இண்டிகோ ஏப்ரல் மாத்தில் சுமார் 38.7 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது.

இண்டிகோ நிறுவனத்தைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 12.62 லட்த பயணிகளுக்கு, ஏர் இந்தியா 11.98 லட்ச பயணிகளுக்கு விமானச் சேவை அளிக்கிறது.

இந்நிலையில் மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளுக்குச் சேவை அளித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+