பெங்களூரு: தமிழ்நாட்டில் பன்னாட்டு வர்த்தகத்திற்கு நுழைவு வாயிலாக இருக்கும் சென்னை துறைமுகத்தை விரிவாக்கத்திற்கு 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது சென்னை போர்ட் டிரஸ்ட்.
மத்திய கப்பல் போக்குவரத்து கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை போர்ட் டிரஸ்ட், சென்னை துறைமுகத்தில் கூடுதலாகக் கப்பல் நிறுத்தம் உருவாக்கவும், தென் இந்தியாவில் இருக்கும் மற்ற துறைமுகத்துடன் போட்டி போட்டு அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறவும், மேம்பட்ட சேவைகளை அளிக்கவும் 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
1,500 கோடி ரூபாய்
அடுத்த 5 வருடத்தில் சென்னை துறைமுகத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக 1,500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் திட்டம் பிபிபி முறையில் செயல்படுத்த உள்ளதாகச் சென்னை போர்ட் டிரஸ்ட் அமைப்பின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
பிபிபி முறை- Public-Private-Partnership mode.
விரிவாக்கப் பணிகள்
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ள விரிவாக்கப் பணிகளில் கடலோர முனையம், சரக்குக் கப்பல்களுக்கான சேவை மேம்பாடு, நிலக்கரி இறக்குமதிக்கான வசதிகள் ஆகியவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் EXIM கிடங்கு ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல்களுக்காகக் காத்துக்கிடக்கிறது.
போட்டி
சென்னை துறைமுகம் தற்போது 5 துறைமுகத்திடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது அதில் கிருஷ்னாபட்டனம் மற்றும் காட்டுப்பள்ளி முக்கியமானவை எனச் சென்னை போர்ட் டிரஸ்ட் அமைப்பின் தலைவர் சி.ஜார்ஜ் தெரிவித்தார்.
8% வருவாய் உயர்வு
2015-16ஆம் நிதியாண்டில் சென்னை துறைமுகம் தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளித்த காரணத்தால் 8% வருவாய் உயர்வை அடைந்துள்ளது. இதன் மூலம் 698.75 கோடி ரூபாயாக இருந்த வருவாய் அளவு 2015-16ஆம் நிதியாண்டில் 758.71 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தமிழகம்
சென்னை துறைமுகத்தை மையமாக வைத்தே பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சென்னையில் தங்களது உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளது. மேலும் சென்னை துறைமுகம் தமிழ்நாட்டின் உற்பத்தித் துறைக்கு அடித்தளமாக விளங்குகிறது.
இத்துறைமுகம் தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்லாமல் ஆந்திர மாநிலத்திற்குச் சிறந்த வர்த்தக வாய்ப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூஸ்லெட்டர்
இதுபோன்ற முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான வர்த்தகச் செய்திகளைத் தினமும் உங்கள் மின்னஞ்சலில் பெற இதைக் கிளிக் செய்யவும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications