டெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெடில் அறிவித்த ஆன்லைன் விளம்பர சேவைக்கான புதிய சரிநிகராக்க வரி (equalization levy) ஜூன் 1 முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.
மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தபடி, இப்புதிய சரிநிகராக்க வரி ஜூன் 1ஆம் தேதி முதல் அதாவது இன்று நடைமுறை படுத்தபட்டது. சந்தையில் இந்தச் சரிநிகராக்க வரியை கூகிள் டாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

அன்லைன் விளம்பர சேவை அளிப்பதன் மூலம் கூகிள், டிவிட்டர், பேஸ்புக் போன்ற பல நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களிடம் இருந்து மிகப்பெரிய வருமானத்தைப் பெறுகிறது.
இதனை முறைப்படுத்தவும், விளம்பர வருவாய்க்குப் பெறப்படும் வருமானத்திற்கு முறையான வரியைப் பெரு நிறுவனங்களிடம் இருந்து வசூல் செய்யவே இப்புதிய சரிநிகராக்க வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது. சரி வாங்க இந்த வரியைப் பற்றி முழுமையாகப் பார்ப்போம்.

இந்திய நிறுவனம் அல்லாத பன்னாட்டு நிறுவனங்களிடம் ஆன்லைன் அல்லது இணையதள விளம்பர சேவைக்காக இந்தியா நிறுவனங்கள் செலுத்தப்படும் தொகை வருடத்திற்கு 1 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் மொத்த தொகைக்கு 6 சதவீத வரியை மத்திய அரசுக்கு இந்திய நிறுவனம் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் பன்னாட்டு நிறுவன தனது விளம்பர வருவாயை இழக்கக் கூடாது என்பதற்காக இந்திய சந்தையில் தனது நிறுவனத்தைப் பதிவிடும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.
மேலும் இந்த 6 சதவீத வரியால் இந்தியாவில் இருக்கும் சிறு நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்படும் என்பது வருத்தமான செய்தி.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications