கொழும்பு: இலங்கை நாட்டின் நிதிநிலை மற்றும் கடன் அளவுகள் ஏற்கனவே மோசமாக இருக்கும் நிலையில், இந்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்கும் முயற்சியாக இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.5 பில்லியன் டாலர் கடன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
1.5 பில்லியன் டாலர் கடன் தொகையை 36 மாத கடன் திட்டமாக ஐஎம்எப் வடிவமைத்து இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக 168.1 மில்லியன் டாலர் தொகையை இலங்கை அரசிற்குச் சர்வதேச நாணய நிதியம் அளித்துள்ளது. மீதமுள்ள தொகையை 6 தவணையாக அளிக்கவும் ஐஎம்எப் இலங்கை நாட்டிற்கு உறுதி அளித்துள்ளது.
இலங்கை நாட்டின் புதிய அரசின் பொருளாதார மேம்பாட்டுக் கொள்கைகளின் அடிப்படையாகவே இந்த நிதியுதவிக்கும் ஐஎம்எப் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் 2020ஆம் ஆண்டுக்குள் இலங்கை தனது மொத்த வர்த்தகப் பற்றாக்குறையை 3.5 சதவீதம் அளவிற்குக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.
இதனுடன் நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வரி விதிப்புத் திட்டத்தில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வரவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.