டெல்லி: ஏப்ரல் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி -0.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 3 மாதத்தில் முதல் முறையாகும்.
நாட்டில் உற்பத்தி பணிகள் நலிவடைந்ததாலும், அத்தியாவசியம் பொருட்களின் உற்பத்தி அதிகளவில் குறைந்துள்ளதாலும் ஏப்ரல் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி -0.8 சதவீதம் வரை குறைந்து காணப்படுகிறது.
கடந்த வருடம் இதே ஏப்ரல் மாதத்தில் இதன் அளவு 3.3 சதவீதம் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
தொழிற்துறை உற்பத்தி அறிக்கையின் படி நாட்டில் அத்தியாவசியம் தேவை பொருட்களின் உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 24.9 சதவீதம் வரை சரிந்து காணப்பட்டது.
மேலும் தொழிற்துறை உற்பத்தியில் 75 சதவீதம் உற்பத்தித் துறையைச் சாந்துள்ள நிலையில், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதன் அளவு 3.1 சதவீதம் வரை சரிந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தில் இதன் அளவு 3.9 சதவீதம் அதிகமாகக் காணப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் சுரங்கத்துறை உற்பத்தி அளவு வெறும் 1.4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 2.2 சதவீதம் அளவில் உயர்ந்து காணப்பட்டது.
அதேபோல் மின்சாரத் துறை உற்பத்தி அளவுகள் கடந்த நிதியாண்டில் 5.7 சதவீதம் மட்டுமே உயர்ந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இதன் அளவு 14.6 சதவீதம் அளவில் உயர்ந்துள்ளது.