டெல்லி: ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தனது பதவிக்கால நீட்டிப்புக்கு மறுப்பு தெரிவித்த நிலையில், ராஜனின் பணிக்காலம் வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில் ஆர்பிஐ-யின் புதிய கவர்னர் தேர்ந்தெடுக்கும் பணிகள் மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளின் தலைமையில் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேலும் புதிய கவர்னர் தேர்வு மற்றும் நியமனம் மற்றும் இறுதிக்கட்ட முடிவுகள் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டுத்தொடர் நடைபெறும் முன் எடுக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டுத்தொடர் வருகிற ஜூலை 25ஆம் தேதி நடைபெற உள்ளது. சரி யார் அந்த 2 பேர்..?
துணை கவர்னரா..?
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர் துணை கவர்னர் பணியில் அனுபவம் கொண்ட நபராகத் தான் இருக்கு வேண்டும். இதுவே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், சரியான தேர்வாக இருக்கும் என வங்கித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்படினா.. ரிசர்வ் வங்கி துணை கவர்கனருக்கு தான் ராஜன் சீட்டா..?
வராக் கடன்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தற்போது மிகப்பெரிய தடையாக இருப்பது இந்திய வங்கிகளில் குவிந்து கிடக்கும் வராக் கடன் தான் என ரகுராம் ராஜன் பல மாதங்களாகக் கூறிவரும் நிலையில், தற்போது தான் மத்திய அரசும், நிதியமைச்சகமும் இதை ஒப்புக்கொண்டுள்ளது.
அடுத்தக் கவர்னர்
இதனால் இந்திய பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வராக் கடனை குறைக்கச் சரியான தேர்வு பொது வங்கியின் தலைவராகத்தான் இருக்க முடியும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் 4 பேர்
சந்தையில் நிலவும் கருத்துகள் மற்றும் கணிப்புகளை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு 4 முக்கியத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இதில் எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல், முன்னாள் ஆர்பிஐ துணை கவர்னர் சுபிர் கோகர்ன் மற்றும் ராகேஷ் மோகன் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
தேர்வுகள்
வரித்துறை உயர் அதிகாரி பார்த்தசாரதி ஷோம், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் இணைந்து ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரை தேர்ந்தெடுக்கும் பணிகளைச் செய்து வருகின்றனர்.
முன்னிலையில் 2 பேர்..
தற்போதைய நிலையில் ரகுராம் ராஜன் சீட்டுக்கான போட்டியில் ராகேஷ் மோகன் மற்றும் உர்ஜித் பட்டேல் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
யார் இவர்கள்
சர்வதே நாணய நிதியத்தின் தற்போதைய இந்திய நிர்வாகத் தலைவர் பதவியில் இருக்கிறார் ராகேஷ் மோகன், ரிசர்வ் வங்கியின் நாணய மறுஆய்வு கொள்கை கூட்டத்தில் 2013ஆம் ஆண்டுச் சுபிர் கோகர்ன் அடுத்தாக உர்ஜித் பட்டேல் இணைந்தார்.
இறுதி முடிவுகள்
மூவர் தலைமையிலான தேர்வுக் குழுவில் இறுதி முடிவுகளுக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இறுதிக்கட்ட முடிவுகள் எடுப்பார்கள்
இவை அனைத்தும் ஜூலை 25ஆம் தேதிக்குள் நடைபெறும் என்பது உறுதி.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications