இந்தியாவில் போர் காலத்தில் பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிக்காப்டர்களைத் தயாரிக்கும் திட்டத்தில் அமெரிக்க நிறுவனமான போயிங் மற்றும் டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் சில மாதங்களுக்கு முன் இணைந்தது.
டாடா போயிங் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்னும் TBAL நிறுவனம் புதிய தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தின் அடிக்கல்லை ஹைதராபாத்தில் நகரத்தில் நாட்டியுள்ளது இக்கூட்டணி நிறுவனம்.
இக்கூட்டணி ஹைதராபாத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள தொழிற்சாலையில் போயிங் AH-64 ரக அப்பாச்சி ஹெலிக்காப்டர் ப்யூஸ்லேஜேஸ் மற்றும் விமானசேவையின் பிற உதிரபாகங்களைத் தயாரிக்க உள்ளது.
மேலும் ஹைதராபாத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் AH-64 ரக அப்பாச்சி ஹெலிக்காப்டர்களை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. இன்றைய நிலையில் அப்பாச்சி ரகத் தயாரிப்புகளை அமெரிக்கா உட்பட 15 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் இக்கூட்டணிக்கு உலகளவில் அதிகளவிலான வர்த்தகம் பெற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
இக்கூட்டணியின் தொழிற்சாலையின் துவக்கத்தின் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தின் பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்திகள் புதிய உச்சத்தை அடையும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.