டெல்லி: 48 லட்சம் அரசு ஊழியர்கள், 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் அடையும் 7வது சம்பள கமிஷன் குறித்த பி.கே.சின்ஹா தலைமையிலான குழுவின் பரித்துரைக்கு மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
புதன்கிழமை நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பி.கே.சின்ஹா தலைமையிலான குழுவின் இறுதிக்கட்ட பரிந்துரைகள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சகம் நம்பிக்கை
2017ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை 32 சதவீதம் வரை உயர்த்தப்படும் என அறிவித்தார்.
பி.கே.சின்ஹா
இந்நிலையில் பி.கே.சின்ஹா தலைமையிலான குழு நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்த அறிக்கையின் படி மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவு சேர்ந்து 23.55 சதவீதம் வரையில் சம்பள உயர்வு அளிக்கவும், மத்திய அரசு சார்ந்த பணியில் இருந்து ஓய்வு பெற்றோர் 24 சதவீதம் அளவிலான ஓய்வூதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் பரிந்துரை செய்திருந்தது.
நிதிப் பற்றாக்குறை
7வது சம்பள கமிஷன் அமலாக்கத்தின் மூலம் மத்திய அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவுகள் நடப்பு நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறையான 3.5 சதவீதத்தில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறை
மத்திய அரசு 7வது சம்பள கமிஷன் அறிக்கையை அமலாக்கம் செய்த பின் இந்தியாவில் வாகன விற்பனை குறிப்பாக கார் விற்பனை, வீட்டு மனைகள் விற்பனை ஆகியவை உயரும். பல மாதங்களாக சரிவில் தத்தளிக்கும் ரியல் எஸ்டேட் துறை 7வது சம்பள கமிஷன் ஒப்புதல் மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.
பொருளாதார வளர்ச்சி
சம்பள கமிஷன் அமலாக்கத்தின் மூலம் மத்திய அரசுக்கு கூடுதல் செலவு என்றாலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகத்த விரிவாக்கத்திற்கு இது அடித்தளமாக இருக்கும்.
வங்கிகள்
இதனால் வங்கிகளின் வீட்டுக் கடன், வாகன கடன், அடமானக்கடன், என பல வகையில் வர்த்தகம் அதிகரிக்கும். இதுவே வங்கிகளில் வராக்கடன் அளவை குறைக்க மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications