சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு - உயர்ந்ததுக்கான 10 காரணங்கள் என்னவாக இருக்கும்..?

சென்னை: திங்கட்கிழமை அதிகபட்ச உச்சமாக 500 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் இன்றும் ஏற்றத்துடனே தொடங்கியுள்ளது. இன்று 72.94 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் தற்போது 27699.63 புள்ளிகளை எட்டியுள்ளது. நிஃப்டி குறியீடு 20.25 புள்ளிகள் உயர்ந்து 8488.15 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்ததுக்கான 10 காரணங்கள் என்னவாக இருக்கும்..? வாங்க பார்ப்போம்.

மும்பை பங்குச் சந்தை நேற்று 500 புள்ளிகள் உயர்ந்து 27,627 புள்ளிகளை எட்டி, ஆகஸ்ட் 2015 மாதத்திற்கு பின் இதுவே மிக அதிகமாகும். அதே நேரம் நிஃப்டியும் 11 மாத உயர்வாக 8,474 புள்ளிகளை எட்டியது.

இது உலக பொருளாதாரம் மிகப் பெரிய மீட்பு பாதையில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது அமெரிக்க வேலைத் தரவுடன் ஒப்பிட்டதை விட அதிகமாகும்.

வேலை வாய்ப்பு அதிகரித்ததன் காரணமான உயர்வு

வேலை வாய்ப்பு அதிகரித்ததன் காரணமான உயர்வு

கடந்த வாரம் வெளியான அமெரிக்க வேலை வாய்ப்புத் தரவு அறிக்கையைப் பின்பற்றி இந்திய பங்குச் சந்தை உலக அணிவகுப்பில் பங்கேற்றது. ஐரோப்பிய சந்தை 4 சதவீதம் உயர்ந்து இருந்தாலும், ஆசிய சந்தையில் ஜப்பானே முன்னிலைப் பிடித்தது.

உலக அணிவகுப்பைத் தூண்டுதல்

உலக அணிவகுப்பைத் தூண்டுதல்

வலுவான அமெரிக்க வேலைகள் தரவு இருந்தபோதிலும், பிரிக்ஸிட்டை அடுத்து நிறைய ஆய்வாளர்கள் அமெரிக்க பெடரல் ரிசர்வின் விகித உயர்வு தாமதம் ஆகும் என்று நம்புகிறது. மேலும் தங்கள் பணவியல் கொள்கையைத் தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம், அதே போல் மற்ற உலக மத்திய வங்கிகளும் எதிர்பார்த்தது. பங்கு மற்றும் பொருட்கள் சந்தை போன்ற ஆபத்து சொத்துக்களில் ஒரு உலக அணிவகுப்பைத் தூண்டியுள்ளது.

அதீத லாபம் பெற்ற நிஃப்டி50

அதீத லாபம் பெற்ற நிஃப்டி50

வங்கி பங்குகளின் லாபங்கள் உயர்ந்ததன் தலைமையில், நிஃப்டி50 குறியீட்டில் உள்ள எல்லாப் பங்குகளும் உயர்ந்தன. பருவ மழையில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தை அடுத்த அதீத நம்பிக்கையில் பேங்க் ஆஃப் பரோடா மற்றும் எஸ்பிஐயின் பங்குகள் முறையே 5 மற்றும் 3 சதவீதம் உயர்ந்தன.

பருவ மழையின் தேவை

பருவ மழையின் தேவை

இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் வறட்சியினால் மாறி மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டது, அதனால் சாதாரண பருவ மழை உரிய நுகர்வு தலைமையிலான வளர்ச்சிக்காக அவசியம்.

வட்டி விகிதம் குறைக்க வாய்ப்பு

வட்டி விகிதம் குறைக்க வாய்ப்பு

உணர்ச்சிமிக்க மதிப்பீடான ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் பங்குகளும் இன்று நன்றாகச் செயல்பட்டன. பருவமழையில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தை அடுத்து இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த கொள்கை சந்திக்க வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சிறந்த வருவாய் வளர்ச்சி

சிறந்த வருவாய் வளர்ச்சி

இந்தியா இன்க் இரண்டு ஆண்டுகளில் சிறந்த வருவாய் வளர்ச்சி பதிவு செய்யும் என்று நம்பப்படுகிறது, மேலும் தலால் ஸ்ட்ரீட் உணர்வுகளை அதிகரித்துள்ளது. தனியார் வங்கி நிறுவனமான இன்டஸ் இன்ட் வங்கி எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்துடன் ஜூன் காலாண்டைத் துவங்கியுள்ளது.

ஜிஎஸ்டி மசோதா

ஜிஎஸ்டி மசோதா

பொருட்கள் மற்றும் சேவைகள் வரி அல்லது ஜிஎஸ்டி வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படல், சுதந்திரம் அடைந்ததில் இருந்து மிகப்பெரிய வரி சீர்திருத்தம் உள்நாட்டுப் பங்கு வர்த்தகத்தில் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்டால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1-2 சதவீதம் அதிகரிக்க முடியும் மதிப்பிடப்படுகிறது.

உலகளாவிய தரகுகள்

உலகளாவிய தரகுகள்

வலுவான வருவாய் வளர்ச்சி உள்நாட்டு மேக்ரோ குறிகாட்டிகள் மற்றும் சாத்தியமான மேம்படுத்த மேற்கோள்படி, கடந்த சில நாட்களாக உலகளாவிய பல தரகுகள் இந்தியா மீது "அதிக எதிர்பார்ப்பை" ஏற்படுத்தியுள்ளது. இது சாதகமான முதலீட்டாளர் உணர்வு சேர்க்கிறது.

எச்எஸ்பிசி கனிப்பு

எச்எஸ்பிசி கனிப்பு

எச்எஸ்பிசியைப் பொருத்த வரை, இந்தியா உறுதியான வளர்ச்சி உடையதாகும். ஏழாவது சம்பள ஆணையம் பரிந்துரைகளை செயல்படுத்த இந்தியாவில் நுகர்வு மற்றொரு ஊக்குவிப்பாக செயல்பட காணப்படுவதால் சேர்க்கப்பட்டது.

சாதகமான காரணி

சாதகமான காரணி

ரூபாயின் ஒப்பீட்டளவிலான செயல்திறன், உலக நாணய சந்தையில் பெரிய ஏற்ற இறக்கம் இருந்தாலும் பிரிக்ஸிட் பதிவு, பங்கு அணிவகுப்பில் மற்றொரு சாதகமான காரணியாகக் கருதப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+