வருமான வரி தாக்கல் செய்ததை வங்கி இணையம் கணக்கு வாயிலாகச் சரிபார்ப்பது மட்டும் இல்லாமல், இனி ஏடிஎம் இயந்திரங்களிலும் சரிபார்க்கும் முறையை வங்கிகள் அறிமுகப்படுத்தி உள்ளன.
மேலும், வருமான வரி தாக்கல் செய்ததைச் சரிபார்க்கத் தேவைப்படும் மின்னணு சரிபார்ப்பு குறியீட்டை (EVC) ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஏடிம்களில் உங்களால் உருவாக்க இயலும்.
இத்திட்டத்தைப் பிற வங்கிகளும் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ஏடிஎம் வசதி யாருக்காக
மே, 2016 முதல் வருமான வரித் துறை வங்கி கணக்கு சார்ந்த சரிபார்த்தல் வசதியை, இணையதள பேங்கிங் வசதியை அறிமுகப்படுத்தியது.
ஆனால் இணையதள பேங்கிங் வசதி இல்லாதவர்களுக்காக, ஏடிஎம் வசதியை தற்போது வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிதாக தாக்கல் செய்பவர்கள்
புதிதாக வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் 2016, ஜூலை 31 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.
பிரச்சனை மற்றும் சிக்கல்கள் இல்லை
இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் இணையம் வாயிலாக வருமான வரி தாக்கல் செய்ததை எந்தச் பிரச்சனையும் இல்லாமல் சரிபார்க்க இயலும்.
பேப்பர் போன்ற ITR-V சான்றிதழைப் பெங்களுரூ செண்ட்ரல் ப்ராசசிங் மையத்திற்குத் தபால் மூலமாக அனுப்பக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
ITR-1 படிவம்
ITR-1 வாயிலாகத் தனி நபர் சம்பளம், வீடு மற்றும் வட்டி உட்பட மற்ற ஆதாயங்களில் இருந்து பெரும் வருமானம் உள்ளவர்கள் தாக்கல் செய்ய வேண்டிய படிவம்.
ITR-2 படிவம்
ITR-2 வாயிலாகத் தனிநபர்கள் மற்றும் இந்து மதம் கூட்டுக்குடும்பங்கள் வணிக அல்லது தொழிலில் இருந்து வருமானம் இல்லாதவர்கள் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டிய படிவம்.
ITR-2A படிவம்
ITR-2A வாயிலாகத் தனிநபர்கள் மற்றும் இந்து மதம் கூட்டுக்குடும்பங்கள் வணிக அல்லது தொழிலில் இருந்து வருமானம், முதலீட்டு வரவுகள் மற்றும் வெளிநாட்டில் சொத்து இல்லாதவர்கள், வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டிய படிவம்.