இந்தியாவின் முக்கிய நிதி நகரங்களாக மும்பையும், அகமதாபாத்தும் இருக்கின்றன. இந்தியாவின் வணிக தலைநகரான மும்பைக்கு அடுத்து அதிக வர்த்தகம் நடக்கும் இடமாக அகமதாபாத் திகழ்கிறது.
தற்போது கேசிஆர் தலைமையிலான தெலுங்கானா அரசு ஆறு முதல் ஒன்பது மாதத்திற்குள் ஒரு நிதி நகரத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே ஹைதராபாத் நிதி நகரமாக இருந்தாலும், மாநில அரசு புதிதாக ஒரு நிதி நகரத்தை உருவாக்க முயற்சித்துள்ளது.
தொழில்நுட்பத்தில் இன்னும் வளர்ச்சி அடையாத மும்பை, அகமதாபாத் போன்ற நகரங்களுடன் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த ஹைதராபாத் போட்டியாக திகழ வேண்டும் என்று தெலுங்கானா அரசு விரும்புகிறது.
2006-2011 ஆட்சிக் காலத்தில் சென்னை அருகே நிதி நகரம் ஒன்று தனியார் பங்கேற்புடன் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.