நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாத காலகட்டத்தில் இந்திய சந்தையில் 5.34 பில்லியன் டாலர் அன்னிய முதலீடாகக் குவிந்துள்ளது என வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 4.76 பில்லியன் டாலர் ஆட்டோமேடிக் வாயிலாகவும், 582 மில்லியன் டாலர் அனுமதியின் பெயரிலும் இந்திய சந்தையின் அன்னிய முதலீடாகக் குவித்துள்ளது என அமைச்சர் அர்ஜூன் மெக்வால் எழுத்து வடிவத்தில் நாடாளுமன்றத்திற்குப் பதில் அளித்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு நிதிதிரட்டும் வகையில் அன்னிய முதலீட்டுச் சட்டங்களில் சில முக்கிய மாற்றங்களைச் செய்தது இதன் வாயிலாகத் தான் 2 மாத காலத்தில் 5.34 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீடு குவிந்துள்ளது.
பாதுகாப்பு, பார்மா, ஏவியேஷன், உணவகங்கள் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளில் அன்னிய முதலீடு குறித்த தளர்வுகள் செய்யப்பட்டது.
ஆனால் ஏப்ரல்-மே காலக்கட்ஙகளில் பாதுகாப்புத்துறையில் எவ்விதமான அன்னிய முதலீடும் செய்யப்படவில்லை.