மும்பை: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் பயணிகளுக்கான இன்சூரன்ஸ் மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் சேவையை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
பயணிகளுக்கான இன்சுரன்ஸ்
பயணிகளுக்கான இன்சுரன்ஸ் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும், அதற்காக மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ஐஆர்சிடிசி தலைவர் அருண் குமார் மனோசா கூறியுள்ளார்.
10 லட்சத்துக்கான இந்தக் காப்பீட்டுக்கு ஒருவருக்கு ரூ.2-ஐ விடக் குறைவாக இருக்கும் எனவும் கூறினார்.
எஸ்பிஐ மொபைல் வேலெட் பட்டி
ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான இது கேட்டரிங், சுற்றுலா மற்றும் இணைய டிக்கெட் நடவடிக்கைகள் கையாள்கிறது. தற்போது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் எஸ்பிஐ மொபைல் வேலெட் பட்டியில் இணைந்து டிஜிட்டல் மூலமாக பணப் பரிவரித்தனை சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்
ரயில்வே டிக்கெட் வழங்கும் பிற சேவைகளை அதிகரிக்க இன்னும் சில மாதங்களில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை விற்கும் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இ-டிக்கெட் ரத்து செய்தல்
இ-டிக்கெட் ரத்து செய்தல் மற்றும் பணம் திரும்பப் பெறுதலை மேலும் சுலபமாக்கக் கூடிய ஆண்ட்ராய்ட் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இதனால் டிக்கெட் ரத்து செய்தல் மற்றும் பணத்தை திருப்பி அளிக்கும் சேவை எளிதாகும் என்றும் கூறினார்.
இ-வேலெட்
சில தொழில்நுட்ப பிரச்சனைகளால் கார்டு பேமெண்ட் செய்யும் போது 2-3 சதவீத தோல்வி ஏற்படுகிறது. எனவே ஆதார் மற்றும் பான் கார்டுகளை இ-வேலெட் உடன் இணைத்து புதிய சேவையை அறிமுகப்படுத்துவதினால் பேமெண்ட் தொல்வி குறைக்கப்படும்
தசரா அல்லது தீபாவளி
இந்த புதிய இ-வேலெட் சேவைக்கான வேலைகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளதால் அக்டோபர் மாதத்தில் தசரா அல்லது தீபாவளியின் போது ஐஆர்சிடிசியின் இ-வேலெட் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
சேவை மெருகேற்றுதல்
ஐஆர்சிடிசி நிறுவனம் மேலும் தங்களது சேவைகளை மெருகேற்ற மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்,
மைசூர், மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட், உணவு பரிமாறல் & ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக
அருண் குமார் மனோசா தெரிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications