இன்போசிஸ் ஊழியர்களுக்கு அடித்தது யோகம்.. 'பம்பர் ஆஃபர்'..!

பெங்களுரூ: 13 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக இன்போசிஸ், தனது ஊழியர்களுக்கு நிறுவனப் பங்குகளை வழங்கியுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் திளைத்துள்ளனர். இது போதாதென்று அடுத்த 5 வருடங்களுக்கு இதேபோல் நிறுவனப் பங்குகளை ஊழியர்களுக்கு வழங்குவோம் என்றும் உறுதியளித்துள்ளது.

என்னடா நடக்குது இங்க..? இது தான் டிசிஎஸ், சிடிஎஸ், விப்ரோ நிறுவன ஊழியர்களின் தற்போதைய மைண்ட் வாய்ஸாக இருக்கும்.!

இன்போசிஸ்

இன்போசிஸ்

இந்திய ஐடி சந்தை ஏற்கனவே பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில் இன்போசிஸ் விஷால் சிக்கா நியமனத்திற்குப் பின் பல முக்கிய உயர் அதிகாரிகளை இழந்துள்ளது.

இந்நிலையில் ஊழியர்களை நிறுவனத்தில் நிலைத்திருக்கவும், தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றவும், இன்போசிஸ் நிறுவனம் 13 வருடத்திற்குப் பிறகு முதல் முறையாக ஊழியர்களுக்கு நிறுவனப் பங்குகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் நிறுவனத்தில் ஊழியர்களின் வெளியேற்றம் அதிகளவில் குறைக்கப்படும் என்பது இன்போசிஸ் நம்பிக்கை.

 

முதல் கட்டம்

முதல் கட்டம்

முதல் கட்டமாக இன்போசிஸ் நிறுவனத்தில் நடுநிலை மேலாளர், கன்சல்டன்ட் மற்றும் டெக்னிக்கல் லீட் ஆகிய பதவிகளில் இருக்கும் 7,800 பேருக்கு 250 முதல் 500 பங்குகளை வரை அளிக்க முடிவு செய்துள்ளது இன்போசிஸ்.

7,800 பேர் என்பது குறைவாகத் தெரிந்தாலும், இப்பதவிகளில் இருக்கும் மொத்த ஊழியர்களின் இது 25 சதவீதம்.

 

4 வருடம்

4 வருடம்

மீதமுள்ள ஊழியர்களுக்கு அடுத்த 4 முதல் 5 வருடத்தில் 25 சதவீத ஊழியர்கள் எனப் பிரித்துப் பங்குகளை வழங்க இன்போசிஸ் முடிவு செய்துள்ளது. இந்தப் பங்குகளை ஊழியர்கள் எப்போது வேண்டுமானலும் விற்கலாம்.

இதனால் உயர் கிழ் மட்ட நிர்வாகப் பொறுப்பில் அடுத்தச் சில வருடங்களுக்கு எவ்விதமான மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பங்குகள்..

பங்குகள்..

ஊழியர்கள் வழங்கிய பங்குகளின் முக மதிப்பு 5 ரூபாய் என ஒரு பங்கின் விலை 1,077 ரூபாய் என்ற விலையில் பங்குகள் ஊழியர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு நபருக்கு 2.68 லட்சம் ரூபாய் (250 பங்குகள்) முதல் 5.36 லட்சம் ரூபாய் (500 பங்குகள்) வரை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது.

 

வளர்ச்சி

வளர்ச்சி

இன்போசிஸ் நிறுவன வளர்ச்சியில் ஊழியர்களுக்குப் பங்கு இருப்பதைப் போல லாபத்தில் அவர்களுக்குப் பங்கு அளிக்க வேண்டும் என் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஊழியர்களுக்கான பங்கு விநியோகம் அடுத்த 4 முதல் 5 வருடங்களுக்குத் தொடரும் என இன்போசிஸ் குழுமத்தின் மனித வள பிரிவின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சங்கர் தெரிவித்தார்.

 

 

இதையும் படிங்க

இதையும் படிங்க


 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+