இன்றைய நிலையில் நாட்டில் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் பெரும்பாலானவை தற்போது ஆன்லைன் விற்பனை சேவையை அளிக்கிறது காரணம் அதிகளவிலான லாபம்.
கடைகளில் பொருட்களை விற்பனை செய்வதை விடவும், ஆன்லைன் மூலம் அதிகளவிலான லாபம் பெறப்படுகிறது எனப் புதிய ஆய்வு கூறுகிறது.
ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் போது வாடிக்கையாளர் சிறந்த பொருட்களை அதிகளவில் நாடுவதால், சில்லறை விற்பனையாளர்கள் தற்போது தரமான பொருட்களை அளித்து அதிகளவிலான விற்பனையும் லாபத்தையும் பெறுகின்றனர்.
இதன் வெளிப்பாடே இந்தியாவில் அதிகளவிலான ஆன்லைன் சேவை நிறுவனங்கள் உயர்வதற்கான முக்கியக் காரணமாக உயர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியா மோனாஷ் பல்கலைக்கழகம் பேராசியர் Junzhao Ma சில்லறை வர்த்தகத்தில் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தக நிலை குறித்து ஆய்வு செய்தபோது இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.