மும்பை: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் கடைசி இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் தமிழ் குட்ரிட்டன்ஸ் கணிப்புகள் படி நாட்டின் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, 7வது சம்பள கமிஷன், கடைசி நாணய கொள்கை கூட்டம் என எவ்விதமான போலி காரணங்கள் கூறாமல் ரகுராம் ராஜன் தனது கருத்தில் உறுதியாக நின்றார்.
இதனால் வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் கடந்த நாணய கொள்கையில் அறிவித்தபடி 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவித்தார். இதனால் நிதியமைச்சம் மற்றும் வணிக வங்கிகள் சோகத்தில் மூழ்கியுள்ளது.
தற்போது உள்ள வட்டி விகிதத்திலேயே சந்தை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதனால் நாணய கொள்கையில் மாற்றங்கள் அவசியமற்றது.
ஏற்கனவே ரிசர்வ் வங்கி பலமுறை வட்டியைக் குறைத்தும், வணிக வங்கிகள் மிகவும் குறைவான அளவிலேயே வட்டியைக் குறைத்துள்ளது. இதனால் இந்தியாவில் பணப்புழக்கம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் பருவமழை பாதிப்பால் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை அதிகளவில் உயர்ந்து நுகர்வோர் பணவீக்கத்தை அதிகளவில் பாதித்தது.
ரெப்போ விகிதத்தைப் போல் சிஆர்ஆர் விகிதம், எஸ்எல்ஆர் விகிதத்திலும் மாற்றமில்லை.
அதேபோல் நாட்டின் வளர்ச்சி விகிதமான 7.6 சதவீதத்தில் எவ்விதமான மாற்றமும் ஆர்பிஐ அறிவிக்கவில்லை.