1.36 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்யவில்லை..! மத்திய அரசு அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் ஃபைலர்ஸ் மானிட்டரிங் சிஸ்டம் (NMS) மூலமாக 1.36 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1.36 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்யவில்லை..! மத்திய அரசு அறிவிப்பு..!

ராஜ்ய சபாவில் செவ்வாய்க்கிழமை கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்குப் பதில் அளித்த மாநிலங்களுக்கான நிதி அமைச்சர் சந்தோஷ் குமார் காங்வார் வரி செலுத்தக்கூடிய சாத்தியம் இருந்தும் 1.36 கோடி நபர்கள் வரி தாக்கல் செய்யவில்லை என்றும், இவர்களை நான் ஃபைலர்ஸ் மானிட்டரிங் சிஸ்டம் மூலம் கண்டறிந்துள்ளதாகவும் பதில் அளித்தார்.

2015-16 நிதி வருடத்தில் மொத்தம் 5,24,38,971 பேர் வருமான வரி செலுத்தியிருக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளார்.

வருமான வரித்துறை செயல்படுத்தி வரும் என்எம்எஸ் முறையைப் பயன்படுத்தி வீட்டின் விவரம், தனிநபர் விவரம், மூன்றாம் நபர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிவர்த்தனை போன்ற விவரங்களைப் பெற இயலும் என்றார்.

மேலும், ஒரு கேள்விக்கு பதில் அளித்த அவர் 2016, ஃபிப்ரவரி 29 வரை கணக்கிடப்பட்டு வருவாய் துறையினர் மூலமாக தற்போது 2,59,260 நபர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் ஏதேனும் நிறுவனங்கள் வெளிநாட்டுப் பரிவர்த்தனை மூலம் மோசடி செய்துள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது என்று கூறினார் ஆனால் நிறுவனங்களின் பெயரை வெளியிடவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

1.36 Lakh non-tax filers identified

1.36 Lakh non-tax filers identified - Central govt
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X