இந்தியாவின் மூன்றாம் நிலை நகரங்களில் கடை விரிக்கும் சியோமி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான சியோமி நிறுவனம் தங்கள் புதிய தயாரிப்புகளின் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியாவின் மூன்றாம் நிலை நகரங்களில் தனது நேரடி கடைகளை திறக்க இருக்கிறது.

 
இந்தியாவின் மூன்றாம் நிலை நகரங்களில் கடை விரிக்கும் சியோமி..!

தற்போது 5,000 ஸ்டோர்கள் உள்ள நிலையில் 2017-ம் ஆண்டிற்குள் 10,000 ஸ்டோர்களை திறக்க முடிவுசெய்துள்ளதாகச் செய்திகள் சியோமி நிறுவனத்தின் மேல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

சியோமி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மனு ஜெயின் கூறுகையில் முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் மட்டுமே ஸ்டோர்கள் உள்ளன. அதை மேலும் விரிவு படுத்தி இந்தியாவின் மூன்றாம் நிலை நகரங்களில் ஸ்டோர்களை திறக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்நிறுவனத்தின் 75 சதவீத ஸ்மார்ட் ஃபோன்கள் இந்தியாவிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இப்போது அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் ஸ்மார்ட் ஏர் சுத்திகரிப்பு உட்பட தங்களது நிறுவனத்தின் பிற தயாரிப்புகளையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.

ஆரம்பக்கட்ட நிலை

இந்தியாவில் துவக்க நிலையில் 35 நபர்களுடன் துவங்கப்பட்ட நாங்கள் இன்னும் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தற்போது உள்ள 100 நபர்கள் கொண்ட குழுவாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு லீ ஜூன் என்பவரால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவில் 2014-ம் ஆண்டு தனது விற்பனையைத் துவக்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Xiaomi opens stores in India's Tier-III towns for growth

Xiaomi opens stores in India's Tier-III towns for growth
Story first published: Thursday, August 11, 2016, 19:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X