பொழுதுபோக்கு என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று, இது கீழ்மட்டத்தில் இருந்து உழைக்கும் மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும்.
உலகின் கோடீஸ்வரர்கள் தொகை கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவாக 2,473 பேராகப் பட்டியல் நீண்டுள்ளது என்று வெல்த்-எக்ஸ் என்ற கன்சல்ட்டிங் நிறுவனம் ஆய்வறிக்கை கூறியுள்ளது. இந்த உலக கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 7.7 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது.
உலகில் 3.9 சதவீத செல்வம்
உலகில் உள்ள மொத்த செல்வத்தில் 3.9 சதவீதத்தை இந்த கோடீஸ்வரர்களின் கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவான பண்புகள்
புதிய தொழில் தொடங்குவதே பெரும்பாலான கோடீஸ்வரர்களின் பொதுவான பண்புகள். இந்த ஆய்வறிக்கையின் படி 87 சதவீத கோடிஸ்வரர்கள் தங்களது வருங்காலத்தை தாங்கலாகவே முடிவு செய்கின்றனர்.
ஆய்வறிக்கை
இந்த அறிக்கையில் உலகின் பணக்காரர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் என்ன செய்வார்கள்? என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
சமூகத் தொண்டு
இந்த ஆய்வறிக்கையின் படி பாதிக்கும் மேலான கோடீஸ்வர்களில் 56 சதவீதத்தினர் சமூகத் தொண்டு செய்வதிலேயே தங்களது ஓய்வு நேரத்தைச் செலவழிப்பதாக்க அறிக்கை கூறுகிறது.
காரணம்
பில் கேட்ஸ், வாரன் பஃபெட் போன்ற கோடீஸ்வரர்களின் சமூகத் தொண்டு உலகளவில் சென்றடைந்ததே இது அதிகரித்து வருவதற்கான காரணம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
சமுகத் தொண்டைத் தவிர பிற பொழுதுபோக்குகள்
சமுகத் தொண்டைத் தவிர சுற்றுலா, கலை, நாகரிகம் போன்றவற்றில் கோடிஸ்வரர்கள் கவனம் செலுத்துவதாகவும், அதில் 31 சதவீதத்தினர் சுற்றுலா போன்ற பயணங்களுக்கும், 29 சதவீதம் நபர்கள் கலை போன்றவற்றிலும் தங்களின் விருப்பமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கோடீஸ்வரன்
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கோடி எல்லாம் வெறும் தெருக்கோடி தூரம் தான்.
ஜிஎஸ்டி மசோதாவால் எந்தெந்த பொருட்கள் விலை உயரும்..? எந்தெந்த பொருட்கள் விலை குறையும்..?
ஜிஎஸ்டி மசோதாவால் எந்தெந்த பொருட்கள் விலை உயரும்..? எந்தெந்த பொருட்கள் விலை குறையும்..?