புது டெல்லி: பணமில்லா பரிவத்தனையை ஊக்குவிக்கும் வகையில் கிரெடிட், டெபிட், இணையதள வங்கி சேவைகளைப் பயன்படுத்தி அரசு துறைகளுக்கு பண பரிமாற்றம் செய்பவர்களுக்கு இனி பரிமாற்ற கட்டணங்கள் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR)
இப்போது வாடிக்கையாளர்கள் கிரெடிட், டெபிட், இணையதள வங்கி வாயிலாக அரசு துறைகளுக்கு பண பரிமாற்றம் செய்யும் போது வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR)என அரசுக்குக் பன பரிமாற்ற கட்டணமாக செலுத்திவருகின்றனர்.
கட்டணங்கள்
2012-ம் வருடம் ரிசர்வ் வங்கி எம்டிஆர் கட்டணத்தை 2,000 ரூபாய்க்கு குறைவாக பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 0.75 பரிவர்த்தனை கட்டணமாகவும் அதற்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 1 சதவீதம் பரிவர்த்தனை கட்டணமாகவும் நிர்னைத்தது. எனினும், கிரெடிட் கார்டு பரிவத்தனைகளுக்கு ஆர்பிஐ எந்த முடிவையும் எடுக்கவில்லை.
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணை
பிற விற்பனையாளர்களைப் போன்று அரசு நிர்வாகங்கள் வணிகர் தள்ளுபடி விகித கட்டணத்தை ஏற்க வேண்டும். டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் அல்லது பிற டிஜிட்டல் முறைகளில் பணம் செலுத்தும் போது பொதுமக்கள் இந்தக் கட்டணத்தை அரசுக்குச் செலுத்த வேண்டாம் என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஆர்பிஐ முயற்சி
சென்ற மார்ச் மாதம் ஆர்பிஐ வங்கி குறைந்த அளவிலான பேப்பர் பணம் பயன்படுத்தும் சமுகம் மற்றும் கார்டுகளை ஏற்கக் கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
கிரெடிட், டெபிட் கார்டு பயனர்கள்
2015 ஆக்டோபர் மாதம் வரையிலான கணக்கின்படி இந்தியாவில் 61.5 கோடி டெபிட் கார்டு பயனர்களும் 2.3 கோடி கிரெடிட் கார்டு பயனர்களும் இருந்தனர்.