இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் ஐந்து துணை வங்கிகளை இணைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.
எனவே, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் மற்றும் ஜெய்ப்பூர் மற்றும் மஹிளா வங்கிகள் எஸ்பிஐ வங்கியுடன் இணைய உள்ளன.
இந்த ஐந்து வங்கிகள் மற்றும் மஹிளா வங்கியுடனான இணைப்புக்கு மத்திய அரசு ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது.
இப்போது இந்த இணைப்பு குறித்து நாம் தெரிந்து கோள்ள வேண்டிய சில விவரங்களை நாம் இங்குப் பார்ப்போம்.
பெரிய ஒருங்கிணைப்பு
இந்திய வங்கித் துறைகளின் வரலாற்றில் இதுவே முதல் மிகப் பெரிய ஒருங்கிணைப்பு ஆகும்.
சொத்து மதிப்பு
இந்த ஒருங்கிணைப்பு மூலம் நீர்யானை போன்று 37 லட்சம் கோடியாக சொத்து மதிப்பை எஸ்பிஐ வங்கி பெறும்.
ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் மற்றும் ஜெய்ப்பூர் பங்குகள்
ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் மற்றும் ஜெய்ப்பூர் வங்கியின் ஒவ்வொரு 10 பங்குகளுக்கும் 28 பங்குகள் எஸ்பிஐ வங்கி அளிக்கும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் மற்றும் திருவாங்கூ பங்குகள்
ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் மற்றும் திருவாங்கூர் வங்கிகளின் ஒவ்வொரு 10 பங்குகளுக்கும் 22 பங்குகள் எஸ்பிஐ வங்கி அளிக்கும்.
பாரதிய மஹிளா வங்கி பங்குகள்
பாரதிய மஹிளா வங்கியின் ஒவ்வொரு 100 கோடி பங்குகளுக்கும் ஃபேஸ் வேல்யூவாக ரூ.1 என 4,42,31,510 பங்குகளை எஸ்பிஐ வங்கி அளிக்கும்.
ஐசிஐசிஐ
இந்தியாவின் இரண்டாம் மிகப்பெரிய வங்கையாக உள்ள ஐசிஐசிஐ வங்கியுடன் ஒப்பிடும் போது ஐந்து மடங்கு அதிகமாக எஸ்பிஐ வங்கியின் சொத்து மதிப்பு இருக்கும்.
ப்ளூம்பெர்க்
ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் மிகப்பெரிய வங்கிகளின் பட்டியலில் முதலிடத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பினால் தரவரிசையில் 50 மதிப்பெண்கள் வரை எஸ்பிஐ வங்கி பெற வாய்ப்புள்ளது.