சனிக்கிழமை புதிய ஆர்பிஐ கவர்னராக அறிவிக்கப்பட தற்போதைய துணை கவர்னர் உர்ஜித் படேலை அறிவித்த சிறிது நேரம் கழித்து அவர் டிவிட்டரில் தனது நன்றியைச் சொல்லி உறுதி செய்தார்.
8வது துணை கவர்னர்
இது வரை ஆர்பிஐ துணை கவர்னராக இருந்ததில் 7 பேர் கவர்னராக பதவி உயர்வு பெற்றதும், இதனைத் தொடர்ந்து இப்போது உர்ஜித் படேல் எட்டாவதாகத் துணை கவர்னரில் இருந்து கவர்னராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உர்ஜித் படேல் டிவிட்
"உங்களுடைய கனிவான வாழ்த்துகளுக்கு அனைவருக்கும் நன்றி! நான் மக்களுடைய எதிர்பார்ப்பைச் சிறந்த முறையில் நிறைவேற்றுவேன்" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் உர்ஜித் படேல் கூறியுள்ளார்.
அருண் ஜேட்லி
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி படேலின் மேல் இருக்கும் நம்பிக்கையைக் கூறும் விதமாக ஆர்பிஐ கவர்னராக பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்றும், ஆர்பிஐ வங்கியை வழிநடத்துவதிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் இவர் வெற்றிகரமாகச் செயல்படுவார் என்று நான் உறுதியாக இருக்கிறேன் என்று டிவிட் செய்துள்ளார்.
உர்ஜித் படேல் தேர்வுக்கான காரணகர்த்தா..!
இதற்கிடையில், ரிசர்வ் வங்கியின் தற்போதைய பணவியல் கொள்கை பொறுப்பாக்கான நிர்வாக இயக்குநர் மைக்கேல் பத்ரா தான் துணை கவர்னர் பட்டேல் தேர்வுக்கான காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.