டெல்லி: நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை விசாரிக்கும் எஸ்எப்ஐஓ (SFIO)- தீவிர மோசடி விசாரணை அமைப்பு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குக் கடன் அளித்த வங்கிகளின் 10 முன்னால் தலைவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடன் தொகை திரும்பப்பெறாததை அடுத்து தீவிர மோசடி விசாரணை அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
எஸ்எப்ஐஓ நோட்டிஸ்
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடன் தொடர்பாக கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குக் கடன் அளித்த பொதுத்துறை வங்கிகளில் 10 வங்கிகளின் முன்னால் தலைவர்களுக்கு எஸ்எப்ஐஓ நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
செயல்படாமல் இருந்த நிறுவனத்திற்கு கடன்
இந்த வழக்கில் தொடர்புடைய 3 வங்கி தலைவர்களை ஏற்கனவே விசாரித்துள்ள எஸ்எப்ஐஓ அது தொடர்பான கருத்துகளைப் பதிவு செய்ததுடன் ஏற்கனவே செயல்படாமல் இருந்த ஒரு நிறுவனத்திற்கு எப்படி கடன் வழங்கப்பட்டது என்று தீவிர விசாரணையைத் துவங்கி உள்ளது.
எஸ்எப்ஐஓ கருத்து
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எஸ்எப்ஐஓ கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குக் கடன் அளிக்கும் போது பணியில் இருந்த முன்னால் தலைவர்களிடம் விசாரிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கம்
9,000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிபிஐ, அமலாக்கத் துறை என அனைவரும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன விஜய மல்லாவை தேடி வரும் நிலையில் இப்போது முன்னால் வங்கி தலைவர்களை விசாரிக்கத் துவங்கி இருப்பது வங்கி ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மூன்று வருடத்தில் 9000 கோடி கடன்
2007-2010 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மீதான கடன் மிக வேகமாக உயர்ந்துள்ளதாகவும், 2008 ஆம் ஆண்டு 934 கோடியாக இருந்த கடன், அதற்கு அடுத்த நிதி ஆண்டில் 1600 கோடி உயர்ந்துள்ளது. 2009-2010 ஆம் நிதி ஆண்டில் 7000 கோடியாகக் கடன் உயர்ந்துள்ளது. பின்னர் 2012 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் 9,000 கோடியாகக் கடன் உயர்ந்துள்ளது.
ப்ராண்ட் வேல்யூ
அதுமட்டும் இல்லாமல் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் ப்ராண்ட் வேல்யூவை எப்படி 4000 கோடியாக உயர்த்திக் காட்டப்பட்டது என்றும், இந்நிறுவனத்தின் பிராண்ட் வேல்யூவை ஆய்வு செய்த நிறுவனத்தின் மீதும் விசாரணை மேற்கொண்டு வருவதாக எஸ்எப்ஐஓ விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications