டெல்லி/என்சிஆர் பகுதிகளில் 2,000சிசி மற்றும் அதற்கு அதிகமான சக்திக் கொண்ட வாகங்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்ட கடந்த 8 மாதத்தில் மட்டும் சுமார் 4,000 கோடி ரூபாய் அளவிலான இழப்பைச் சந்தித்துள்ளதாக இந்தியா ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பின் (SIAM) தலைவர் வினோத் தாசரி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் 1 சதவீத சுற்றுச்சூழல் வரி விதிப்பை அறிவித்து இத்தடை உத்தரவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
தடை
நீதிமன்றத்திற்கு அளித்த தவறான தகவல் மூலம் உச்ச நீதிமன்றம் இத்தடைவித்தது. 2,000சிசி மற்றும் அதற்கு அதிகமான சக்திக் கொண்ட வாகங்கள் மட்டும் அல்லாமல் இந்தியா நிறுவனங்கள் தயாரிக்கும் அனைத்துச் சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களும் இந்திய அரசின் தர விதிமுறைக்குளுக்கு உட்பட்டே சந்தை விற்பனைக்கு வருகிறது.
ஆட்டோமொபைல்
இந்திய வரலாற்றில் முதல் முறையாகத் தவறான தகவல்களைக் கொண்டு வாகன விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என SIAM அமைப்பு தலைவர் 58வது வருடாந்திர கூட்டத்தில் பேசினார்.
சுற்றுச்சூழல்
நாட்டின் சுற்றுச்சூழல் பாதிக்கும் உண்மையான காரணங்களைக் கண்டறியாமல் அனைத்துத் தரப்பினரும் ஆட்டோமொபைல் துறையைச் சீர்ப்படுத்த வலியுறுத்துகின்றனர்.
2000சிசி வாகனங்கள்
டெல்லி உச்ச நீதிமன்றம் டிசம்பர் 16,2015ஆம் ஆண்டு டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் 2000சிசி அதிகச் சக்தி கொண்ட வாகனங்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
20 சதவீதம்
இந்திய சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான அளவில் ஆட்டோமமொபைல் துறை உள்ளது.


Click it and Unblock the Notifications