பெங்களுரூ: இந்தியா டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ-விற்கும் ஏர்டெல் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய போட்டி இருக்கும் என்பதை முன்கூட்டிய அறிந்த ஏர்டெல் நிறுவனம், இன்று சந்தையில் அறிமுகமான ஜியோவிற்கு சவால் ஒன்றை விடுத்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்கிற்கு விலைபோரை துவக்கிய நிலையில், ஏர்டெல் நிறுவனம் டேட்டா ஸ்பீடு போட்டியை சந்தையில் கிளப்பிவிட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம்
ரிலையன்ஸ் ஜியோ-வின் வியாழக்கிழமை என்ற விஷயத்தை அறிந்த ஏர்டெல் நிறுவனம், தன்னிடம் இருக்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை தக்க வைத்துக்கொள்ள திட்டமிட்டு, புதன்கிழமை மாலையிலேயே தனது இணைய தளத்தில் புதிய அறிவிப்பை விட்டுள்ளது.
எப்படி என்ன அறிவிப்பு..?
மும்பை மற்றும் கேரளா
புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் படி, மும்பை மற்றும் கேரளா வட்டங்களில் இருக்கும் தனது அனைத்து அலைக்கற்றைகளையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய பேண்டில் 4ஜி சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது 4ஜி சேவையை விடவும் அதிகவேகமானதாகும். இப்பகுதியில் இருக்கும் ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்கள் அதிகப்பட்சமாக 135Mbps வேகத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
40-80% அதிகம்
135Mbps வேகம் என்பது ஜியோ-வின் அதிகப்பட்ச இணைய வேக சேவை விடவும் சுமார் 40-80 சதவீதம் அதிகமாகும்.
ஜியோ
இத்தகைய மேம்பட்ட சேவையை அளிப்பதில் தான் ஏர்டெல் முன்னிலையில் இருப்பதாக நினைக்கிறது. ஆனால் உண்மையில் இத்தகைய சேவை மும்பை மற்றும் கேரளா வட்டங்களில் மட்டும் தான். இதனால் ஜியோ விற்கு எவ்விதமான பாதிப்பு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சோதனை சேவை
ஜியோ நிறுவனத்தின் சோதனை சேவையில் வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் சுமார் 80-90Mbps இணைய வேக சேவையை அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிணைக்கப்பட்ட சேவை
இத்தகைய அதிகவே சேவையை தனது மொத்த அலைக்கற்றை இணைப்பதன் மூலம் மட்டுமே அளிக்க முடியும். இதனால் 2ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ முயற்சி
இதேபோன்ற ஒருங்கிணைக்கப்பட்ட சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்க ரிலையன்ஸ் ஜியோ முயற்சி செய்து வருகிறது.
அலைக்கற்றை பற்றாக்குறை
தற்போதைய நிலையில் ரிலையன்ஸ் ஜியோவிடம் அதிகளவில் இருப்பது 4ஜி அலைக்கற்றைகள் தான். அடுத்து வரும் ஸ்பெக்டரம் ஏலத்தில் 2ஜி மற்றும் 3ஜி வாங்குவதற்காக மிகப்பெரிய தொகையை ஜியோ முதலீடு செய்யும் இது மட்டும் அல்லாமல் ஏலத்தில் ஏர்டெல் உடனான போட்டி வசூலை விண்ணை முட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.