250 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கியது ஓலா டாக்ஸி நிறுவனம்..!

டெல்லி: பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாக்ஸி ஆப் நிறுவனமான ஓலா 250 ஊழியர்களை வேலையை விட்டுத் தூக்கியது.

250 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கியது ஓலா டாக்ஸி நிறுவனம்..!

கடந்த வாரம் ஓலா நிறுவனம் தனது டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனத்தை மூடப் போவதாகவும் 700 பேர் வரை வேலையை விட்டு நீக்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.

இப்போது அறிவித்த ஒரு வாரத்தில் 250 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது இந்தப் பணி நீக்கம் ஊழியர்களின் செயல்திறன் குறைவு, ஒப்பந்த ஊழியர்களின் கால அளவு முடிவுபெற்றது போன்ற காரணங்களுக்காகவே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதே சமயம் 102 நகரங்களில் தங்களது சேவை அதிகரிப்பதற்காக 300 புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்த இருப்பதாகவும் இதனால் இப்போது 6000 ஆக இருக்கும் தங்களது நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் வலுப்பெறும் என்று கூறியுள்ளார்.

இந்தப் பணி நீக்கத்திற்கான முக்கிய காரணமாக ஓலா நிறுவனம் டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனத்தை தங்களுடைய நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது தான் என்று கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+