ஹைதெராபாத்: இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனரான ஆதி கோத்ரெஜ் மதுவிலக்கிற்கு எதிராக சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்துள்ளார்
மதுவிலக்கை அமல் படுத்துவது மற்றும் செயல்படுத்துவது பயனற்ற முயற்சி.
மதுவிலக்கிற்கு எதிரானவன்
நான் மதுவிலக்கிற்கு எதிரானவன் என்று பீகார் மாநிலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் மதுவிற்கான தடை பற்றிய கேள்விக்கு கோத்ரேஜ் நிறுவன தலைவர் ஆதி கோத்ரெஜ் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நான் வல்லுநர் அல்ல
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ)-இன் தலைவருமான ஆதி கோத்ரெஜ் மதுவிலக்கைப் பற்றி மேலும் கூறும் போது சமூக பிரச்சினைகள் நான் வல்லுநர் அல்ல ஆனால் இது வேலைக்கு ஆகாது என்றார்.
அமெரிக்காவில் தோல்வி
அமெரிக்காவில் மதுவிலக்கை அமல்படுத்த முயன்ற போது அங்கு மாஃபியா கும்பல் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு தோல்வியையே சந்தித்தது.
பலனற்ற முயற்சி
அதே பொல இந்தியாவில் இது வேலைக்கு ஆகாது. தடை செய்ய முயற்சிப்பது பலனற்ற முயற்சி மட்டும் தான். இதை நாம் ஆதரிக்கக் கூடாது என்றார்.
தேர்தலுக்கு நிதி
மேலும் மாநில தேர்தலுக்கு நிதி அளிப்பது ஊழலை ஒளிக்குமா என்ற கேள்விக்கு ‘ஆம்' என்னைப் பொருத்தவரை இது ஊழலை ஒழிக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.
கோத்ரேஜ் நிறுவனம்
கோத்ரேஜ் நிறுவனம் குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டி சாதனங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.