மத்திய அரசு இப்போது நடைமுறையில் உள்ள ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான நிதி ஆண்டினை மாற்றுவதற்கான பொதுமக்களிடம் கருத்தைக் கேட்டு வருகிறது.
நிதி ஆண்டை மாற்றுவது பற்றி நிறைய விவாதங்கள் நடந்த வரும் நிலையில் இந்தியாவிற்கு புதிய நிதி ஆண்டு தேவையா..? என்று நாம் இங்குப் பார்ப்போம்.
ஆய்வு செய்ய புதிய குழு
இந்தியாவிற்கு புதிய நிதி ஆண்டு தேவையா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இது குழு அத்தகையை ஒரு மாற்றத்தினை எப்படிச் செய்வது அதனால் வரக் கூடிய பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்தும் வருகிறது.
வரலாறு
இப்போது இந்தியாவில் ஏப்ரல்-மார்ச் நிதி ஆண்டைக் கடைப்பிடித்து வருகிறோம். இது ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய ஏப்ரல்-மார்ச் நிதி ஆண்டு முறையாகும்.
இதற்கு முன்பு 1867 வரை மே-ஏப்ரல் நிதி ஆண்டு முறையை இந்தியாவில் பின்பற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானில் ஜூலை-ஜூன் நிதி ஆண்டினை கடைப்பிடித்து வருகிறோம்.
1976-க்கு பிறகு நிதி ஆண்டினை மாற்றிய நாடுகள்
அமெரிக்கா ஜூலை 1 முதல் ஜூன் 30 வரையிலான நிதி ஆண்டு கொள்கையை பின்பற்றுகிறது.
அயர்லாந்து ஏப்ரல் - மார்ச் நிதி ஆண்டு கொள்கையை பின்பற்றி வந்தது, இப்போது ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான நிதி ஆண்டு கொள்கையை கடைப்பிடிக்கிறது.
ஆப்கானிஸ்தான் மார்ச் 21 முதல் 20 வரையிலான நிதி ஆண்டு கொள்கையை கடைப்பிடித்து வந்தது அன்மையில் இதை டிசம்பர் 21 முதல் டிசம்பர் 20 நிதி ஆண்டாக மாற்றியுள்ளது.
நிதி ஆண்டை மாற்றுவதற்கான இந்தியாவின் கடைசி முயற்சி
கடந்த 1984 மே மாதம் நிதி ஆண்டு மாற்றுவதற்கான முயற்சியை எடுத்த இந்திய அரசு எல்.கே.ஜா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
இந்து குழு 1987 முதல் ஜனவரி - டிசம்பர் நிதி ஆண்டினை கடைப்பிடிக்கலாம் என்று ஏப்ரல் 1985 ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் நாட்காட்டி நிதி ஆண்டினை கடைப்பிடிக்கலாம் என்றும் முக்கிய காரணியாக பருவமழையைக் குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அரசு மேலும் சிறப்பை எதிர் பார்த்தது
பருவமழையை மட்டுமே இந்த மாற்றத்திற்குக் காரணமாக குறிப்பிட்டிருந்த நிலையில் மத்திய அரசு இதைப்பற்றி முடிவை ஏதும் எடுக்கவில்லை.
அது மட்டும் இல்லாமல் நிதி ஆண்டில் மாற்றம் செய்ய முயற்சிப்பது தரவு சேகரிப்பை பாதிக்கும். நிதி நடைமுறைகள், வரி சட்டங்கள் மற்றும் அமைப்புகள் விரிவான திருத்தங்களை இது மீண்டும் இணைக்க வேண்டி வரும் அதனால் தான் மற்றம் ஏதும் நடைபெறவில்லை என்றும் கூரப்படுகிறது.
பொது மக்கள் கருத்தை எதிர்பார்க்கும் மத்திய அரசு
நிதி ஆண்டு மற்றம் செய்வது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ள மத்திய அரசு இதற்கான வசதியை mygov.in என்ற இணையதளத்தில் அளித்துள்ளது.
இது பற்றிய உங்கள் கருத்தை 2016, செப்டம்பர் 30 வரை பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
பிப்ரவரி கடைசி தேதியில் ஏன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள் தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கடைசி தேதி வந்தாலே நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் பட்ஜெட் நடாளுமன்றத்தில் தாக்கலாகும். இந்த பட்ஜெட் பற்றி பல சுவாரஸ்யங்கள் உள்ளன. பொருளாதார சந்தை நிபுணர்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் இது அறிந்து கொள்ள வேண்டியதுதான். இது பற்றி அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்க.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications