இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்கள், சலுகைகள் வழங்கி வரும் நிலையில் 54 சதவீத நகர்ப்புற இந்தியர்கள் டிஸ்கவுண்ட் இல்லை என்றால் இணைய சாப்பிங் செய்வதில்லை என்று ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

இன்ஷார்ட்ஸ் மற்றும் இப்சாஸ் என்ற செயலி மூலமாக நடந்த ஒரு வாக்கெடுப்பில் இது வாக்கெடுப்பு நடத்தப்பெற்ற போது பெரும்பான்மையானவர்கள் அவர்கள் வீட்டருகில் உள்ள கடைகளில் இருந்து பொருட்களை வாங்கு வதையே விரும்புகின்றனர் ஆன்லைனில் வாங்க விரும்புவதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரூ, கொல்கத்தா, புனே, ஹைத்ராபாதி, அகமதாபாத், சண்டிகர் போன்ற நகரங்களில் இருந்து 1.5 லட்சம் நபர்கள் இந்தக் கேள்விக்கு பதில் அளித்துள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்றதில் 80 சதவீதத்திற்கும் மேலானோர் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
அரசு அன்னிய நேரடி முதலீடு விதிகள் மாற்றம் செய்துள்ளது மற்றும் தள்ளுபடிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளினால் சில்லறை வணிகர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
அன்மையில் கூகிளின் அறிக்கை ஒன்றில் இந்திய ஆன்லைன் நுகர்வோருக்கு விரைவில் சலுகைகள் ஏதும் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.
கூகுள் இந்தியாவின் தலைவர் ஆனந்தன் இது பற்றி கூறுகையில் பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் இன்றைய நுகர்வோர் சந்தையில் நல்ல சந்தை மதிப்புடன் இருக்க இப்போதுள்ள இணையதள வாடிக்கையாளர்களின் பொருட்கள் டெலிவரி சேவை லாபத்திற்கு ஏற்றவாறு இல்லை என்று கூறினார்.


Click it and Unblock the Notifications