மும்பை: மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்ரஸ் பே நிறுவனத்தை 'பே யூ' நிறுவனம் 860 கோடி அளித்து வாங்குவது மிகப் பெறும் ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தினால் இந்த நிறுவனத்தின் பல ஊழியர்கள் கோடிஸ்வரர்களாகவும் ஆபிஸ் பாய் லட்சாதிபதியாக மாறியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
யாருக்கு இந்த ஆஃபர்?
நிறுவனத்தைத் துவங்கிய முதல் வேலை செய்பவர்களுக்கு சிட்ரஸ் பே நிறுவனம் 5 சதவீதத்தை அளிக்க முன்வந்துள்ளது என்று நிர்வாக இயக்குநர் அம்ரிஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
சிட்ரஸ் நிறுவனத்தில் இப்போது 300 ஊழியர்கள் பணிபுரிவதாகவும், மும்பை, பூனே, பெங்களூரூ, குர்கான் உள்ளிட்ட நகரங்களில் இதன் கிளை அலுவலகங்கள் உள்ளது
1 கோடி
இதில் 15 ஊழியர்கள் 1 கோடி ரூபாய் பெறுகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்நிறுவனத்தின் ஆபிஸ் பாய் ஒருவரும் 50 லட்சம் ரூபாய் தனது பங்காகப் பெறுகிறார்.
இந்த நிறுவனத்தின் அனைத்துப் பரிவர்த்தனையும் 2016 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 5 சதவீத பங்குகளை இந்நிறுவனத்தின் விற்பனை பங்கைப் பெறுவர்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்‘முட்டாள்’ தனம்
இது போன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விற்பனைக்கு வருவது அதிகரித்து வரும் நிலையில் ஃபூச்சர் குழுமத்தின் தலைமை பொறுப்பாளர் கிஷோர் பியானி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்‘முட்டாள்' தனமாகச் செயல்படுகிறது நிறுவனத்தை விற்பதே இவர்கள் குறிக்கோள் இவர்களுக்கு இந்நிறுவனத்தைப் பெரிதாகும் எண்ணம் இல்லை என்று கூறியது கவனிக்க வேண்டியது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
2014ம் ஆம் ஆண்டு மைந்தரா நிறுவனம் 375 மில்லியன் டாலருக்கு பிளிப்கார்ட் நிறுவனம் விற்கப்பட்டது. ஃப்ரீசார்ஜ் நிறுவனத்தை 450 மில்லியன் டாலருக்கு ஸ்னாப்டீல் நிறுவனம் கைப்பற்றியது, டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனத்தை ஓலா நிறுவனம் 200 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
சிட்ரஸ் பே நிறுவனத்தை விற்பனை செய்ததை அடுத்து பே யூ நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரியாக அம்ரிஷ் ராவ் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.