விரைவில் உர்ஜித் படேல் கையெழுத்து இடப்பட்ட 20 ரூபாய் நோட்டு அறிமுகம்..!
டெல்லி: ரிசர்வ் வங்கி விரைவில் புதிய ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இடப்பட்ட 20 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய நோட்டுகள் 2005 மகாத்மா காந்தி சீரிஸில் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்களைப் போன்றே இருக்கும் என்றும் ஆனால் நோட்டின் இரண்டு பேணல்களிலும் 'R' குறியீட்டுடன் வெளிவரும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் 20 ரூபாய் நோட்டுகளில் இருந்து செவ்வக அடையாள குறியீடு நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வண்ணத்தில் எந்தவித மாற்றங்களும் இல்லை, முன்பு பயன்பாட்டில் உள்ள நோட்டுகளும் எப்போதும் போலவே செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications