சென்னை: உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஸ்மார்ட்ஃபோன் விற்பனையாளரான ஹவாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் தனது தொழிற்சாலையைத் துவங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை இன்னும் ஓர் இரு மாதங்களில் அறிவிக்கப்படும் என்று சென்ற மாதம் கூறியிருந்தோம்.

சீனாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹவாய் நிறுவனம் இந்த மாதம் இறுதியில் தனது தயாரிப்பைத் துவங்க இருப்பதாகவும் இதற்காகச் சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்பத்துரில் உள்ள ஃபெலெக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஃபெலெக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே லெனோவா நிறுவனத்தின் மோடோரோலா நிறுவனத்திற்கு ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.
மாதம் 200,000 ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிக்க ஹாவாய் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் பின்னர் படிப் படியாக உற்பத்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து ஹவாய் நிறுவனமும் ஃபெலெக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனமும் அதிகாரப் பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

ஹவாய் நிறுவனம் இந்தியாவில் 16 வருடங்களாக மொபைல் வர்த்தகம் செய்து வந்த நிலையில், 1999 ஆம் ஆண்டே பெங்களூரூவில் தங்களது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
ஹாவாய் மற்றும் ஹானர் என்ற இரு பிராண்ட் பெயர்கள் கொண்ட நிறுவனமாக ஸ்மார்ட் போன்களை விற்று வருகிறது. தனது முதல் ஹவாய் பிராண்ட் போனை இந்தியாவில் ஏறத்தாழ மூன்று வருடம் கழித்து அறிமுகப்படுத்தி உள்ளது.
ஹவாய் நிறுவனம் தான் இந்தியாவில் துவங்கப்பட்ட முதல் சீனா நிறுவனம் என்று குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications