சென்னை: அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை 0.1 சதவீதம் குறைத்தது மத்திய அரசு.
தபால் அலுவலகத்தில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்கள், பிபிஎப், சுகன்யா சம்ரிதி திட்டம் என எல்லாத் திட்டங்களுக்கும் இந்த வட்டி குறைப்பு பொருந்தும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் பொது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) சேமிப்பு திட்டங்களில் 8.1 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் இப்போது 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திலும் 7.8 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 7.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கான சிறு சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்திலும் 8.6 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய சிறு சேமிப்பு திட்டங்களின் வீதிப் படி 2016 ஏப்ரல் 1 முதல் ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி விகிதம் மாற்றப்படும் என்று நிதி அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.