மும்பை: செப்டம்பர் 1 முதல் 92 பைசாவில் ரூ.10 லட்சத்துக்கான விருப்ப பயண இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியது.
விபத்துகள் ஏற்படும்போது இந்திய ரயில்வே அளிக்க வேண்டிய இழப்பீடு தொகைக்கு பதிலாகச் சரியான டிக்கெட் உள்ளவர்களுக்கு இந்தக் காப்பீட்டை ஐஆர்சிடிசி சென்ற ஒரு மாதமாக வழங்கி வந்தது.
1 கோடிக்கும் அதிகமான தேர்வுகள்
இந்த விருப்ப இன்சூரன்ஸ் பாலிசிக்கு நல்ல வரவேர்ப்பு கிடைத்துள்ளதாகவும் ஒரு மாதத்தில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த பயண இன்சூரன்ஸ் தீட்டத்தை தேர்வு செய்துள்ளதாகவும் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஏ.கே.மனோச்சா தெரிவித்துள்ளார்.
வாரிசு விவரங்கள்
பயண இன்சூரன்ஸ்க்கான தேர்வை நீங்கள் தேர்வு செய்து ட்க்கெட் புக் செயத பிறகு வாரிசு விவரங்களை கேட்க்கும். அப்போது வாரிசு விவரங்களை உள்ளிட்டால் போதும்.
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இன்சூரன்ஸ் வேண்டும் என்றால் டிக்கெட் புக் செய்யும் போது குழைந்தைகளின் விவ்ரங்களையும் உள்ளிட வேண்டும். இன்சூரன்ஸிற்கான கட்டணம் மட்டும் பெறப்படும்.
இணையதள டிக்கெட் புக்கிங்களுக்கு மட்டுமே
சென்ற ரயில்வே பட்ஜெட் உரையின் போது இத்திட்டத்தைப் பற்றி அறிவித்த ரயில்வே அமைச்ச சுரேஷ் பிரபு இது ட்க்கெட் முக் செய்யும் போது வழங்கப்படும் கூடுதல் சேவையே, தேவை என்றால் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த புதிய முறை புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்களைத் தவிர்த்து அனைவருக்கும் யாரெல்லாம் இணையதளம் மூலம் டிக்கெட் பதிவு செய்து சரியான வகுப்பில் பயணம் செய்கிறார்களோ அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் இந்தக் காப்பீடு அளிக்கப்படும்
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் விளிநாட்டவருக்கு இந்தக் காப்பீடு திட்டம் பொருந்தாது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட், ஆர்ஏசி மற்றும் காத்திருப்பில் உள்ள டிக்கெட்களை வைத்திருப்பவர்களுக்கு இந்தக் காப்பீடு அளிக்கப்படும்.
காப்பீட்டின் பயன்
ரயில் பயணங்களின் போது ஏதேனும் பயங்கரவாத தாக்குதல், வழிப்பறி, கலகத்தை, துப்பாக்கிச் சூடு அல்லது தீ வைப்பு உட்பட அசம்பாவித சம்பவம் ஏற்படும் போது மரணம் அல்லது எழுந்திருக்க முடியாத அளவு ஊனம் ஏற்படும் போது ரூ.10 லட்சமும், உடலின் ஏதேனும் பாகத்திற்கு ஊனம் நேர்ந்தால் ரூ.7.5 லட்சமும், 2 லட்சம் வரை மருத்துவ செலவுகள் மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து செல்ல வேண்டிய இடத்திற்குப் போக்குவரத்து செலவாக ரூ. 10,000 காப்பீடாக வழங்கப்படும்.
டிக்கெட் ரத்து செய்தல்
டிக்கெட் ரத்து செய்யும் போது காப்பீட்டிற்கான ப்ரீமியம் கட்டணம் திருப்பி அளிக்கப்படாது.
மூன்று நிறுவனங்கள் தேர்வு
இதற்காக 19 நிறுவனங்களிடம் இருந்து ஏலம் நடத்தி ஸ்ரீராம் ஜெனரல், ராயல் சுந்தரம் மற்றும் ஐசிஐசிஐ லம்பார்ட் என மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களிடம் ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய செயல்பாட்டைப் பொருத்து ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்றும் கூரப்படுகிறது.
கட்டாயம் அல்ல
எனினும் இது பயணிகளின் விருப்பத் தேர்வே கட்டாயம் அல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக தற்போது 5 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ரெட் பஸ்
இதேப் போன்று தனியார் ரெட் பஸ் டிக்கெட் நிறுவனமும் பயணிகளுக்கான விருப்ப காப்பிட்டு சேவையை ரூ.10-க்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.