நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா அவர்களின் தலைவர் பணிக்காலத்தை மத்திய அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க உள்ளது.
தற்போது மத்திய அரசு எஸ்பிஐ வங்கியின் அதன் 5 கிளை வங்கிளை ஒன்றாக இணைக்கும் பணியில் தீவிரமாக உள்ள நிலையில், இவரது பணிக்காலத்தை 1 ஆண்டு நீட்டிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
2016ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை உலகளாவிய சந்தைக்கும் கொண்டு செல்லும் முயற்சியாக, எஸ்பிஐ வங்கியுடன் அதன் 5 கிளை வங்கிகளையும், பெண்களுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பார்திய மஹிளா வங்கியையும் இணைக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மத்திய அரசும், எஸ்பிஐ வங்கி தரப்பு இணைப்புக்கான பணிகளைச் செய்து வருகிறது.
இந்த வங்கி இணைப்பின் மூலம் எஸ்பிஐ வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 37 லட்சம் கோடி ரூபாயாக அதாவது 555 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக மாற்றப்போகிறது.
இதனுடன் இந்தியா முழுவதும் 22,500 வங்கி கிளைகளை, 58,000த்திற்கும் அதிகமான வங்கிக் கிளைகள் , 50 கோடி வாடிக்கையாளர்கள் என உலகச் சந்தையில் முக்கிய இடத்தைப் பெற உள்ளது.