இந்தியாவில் உள்ள படித்த பெண்களில் அதிகமானவர்கள் தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தான் உள்ளனர் என்றும் அதிலும் 53 சதவீத பெண்கள் நிறுவனர்கள் இந்த ஐந்து மாநிலங்களில் தான் உள்ளனர் என்றும் 2012 ஆண்டு சென்சஸ் கணக்கைப் பயன்படுத்தி இந்தியா ஸ்பெண்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் பெண்கள் சதவீதம் மொத்தமாக 33% சதவீதம் மட்டுமே இந்த மாநிலங்களில் உள்ளன.
தமிழகம்
73.4 சதவீதம் படிப்பறிவு பெற்று மூன்றாவது இடம் பிடித்து உள்ள தமிழகத்தில் இந்திய அளவில் 13.5 சதவீத பெண்கள் சொந்தமாகத் தொழில் செய்து முதல் இடத்தை பிடித்து உள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளா
படிப்பறிவு பெற்ற பெண்களில் இரண்டாம் இடம் பிடித்து உள்ள கேரளாவில் 90 சதவீத பெண்கள் படித்து உள்ளதாகவும், அதில் 11 சதவீதத்தினர் சொந்தமாகத் தொழில் செய்து வருகின்றனர்.
மாகாரஷ்டிரா
மாகாரஷ்டிராவில் 75.9 சதவீதம் பெண்கள் படிப்பறிவு பெற்ற நிலையில் 8.2 சதவீதம் பெண்கள் மட்டுமே சொந்தமாக தொழில் செய்துவருகின்றனர்.
மேற்கு வங்கம்
70.5 சதவீதம் படித்த பெண்கள் இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் 10.3 சதவீதத்தினர் மட்டும் சொந்தமாக தொழில் துவங்கி நடத்தி வருகின்றனர்.
ஆந்திர பிரதேசம்
59.1 சதவீதம் படித்த பெண்கள் உள்ள ஆந்திர பிரதேசத்தில் 10.5 சதவீத பெண்கள் சொந்தமாகத் தொழில் துவங்கி நடத்தி வருகின்றனர்.
சட்டுபுட்டுன்னு 1 கோடி ரூபாய் சம்பாதிக்க அருமையான வழி..!