டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய ஸ்பெக்டர்ம் ஏலம் வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. 65,789.12 கோடி வரை விற்பனையாகி உள்ள காற்றலைகளில் மத்திய அரசு எதிர்பார்த்த வருவாய் வரவில்லை என்று கூரப்படுகிறது.

4ஜி காற்றலைக்கான இந்த ஏலத்தில் அதிகப்படியான காற்றலைகளை வொடாபோன் நிறுவனமும், அதற்கு அடுத்த படியாக ஏர்டெல் நிறுவனமும் வாங்கியுள்ளனர்.
புதிதாகத் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெரும் அளவில் காற்றலைகள் வாங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வோடாபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை விட குறைவான அளவே வங்கி உள்ளனர். ஐடியா நிறுவனம் ஜியோவை விடக் குறைவான அளவே காற்றலைகளை வாங்கி உள்ளனர்.
விலை அதிகம்
2300 மெகாஹெட்ஸ் காற்றலைகள் விற்பனைக்கு 7 மொபைல் போன் நிறுவனங்களுக்கு இடையிலும் பெரும் போட்டி நிலவியது. இதைல் 700 மெகா ஹெட்ஸ் மட்டுமே 4ஜி சேவைகளுக்கான காற்றலைகள் ஆகும். அரசு நிர்னையித்த விலை மிகவும் அதிகமாக மிகவும் அதிகமாக இருந்தால் விலையை குறைத்து மீண்டும் ஏலம் விடும் படி அணைத்து நிறுவனங்களும் கேட்டுக் கொண்டனர்.
யார் எவ்வளவு காற்றலைகளை வாங்கி உள்ளனர்?
வோடாபோன் நிறுவனம் அதிகபட்சமாக 20,000 கோடிக்கும், ஏர்டெல் நிறுவனம் 14,244 கோடிக்கும், ஜியோ நிறுவனம் 13,672 கோடிக்கும், ஐடியா நிறுவனம் 12,798 கோடிக்கும், டாடா டொகோமோ நிறுவனம் 4000 கோடிக்கும் 4ஜி காற்றலைகளை வங்கியுள்ளனர்.
இதர ரிலையன்ஸ் இன்ஃபோகாம், ஏர்செல் போன்ற நெட்வொர்க்குகளும் சொர்ப்ப அளவில் காற்றலைகளை வாங்கி உள்ளனர்.
வோடபோன், ஐடியா நிலை
வோடபோன் நிறுவனத்திற்கு மிகவும் நெருக்கடியான நிலை இரிந்த இந்த ஏலத்தில் தனது தாய் நிறுவனத்திடம் பெற்ற 47,700 கோடி பெறும் உதவியாக இருந்தது.
ஏற்கனவே பான் இந்தியா போன்றவை உடைய ஜியோவுடன் போட்டிப்போட ஐடியா நிறுவனத்திற்கு அதிகப்படியான 4ஜி பேண்ட்வித் தேவைப்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிர்லா
ஐடியா நிறுவனம் 890 மெகாஹெட்ஸ் காற்றலையுடன் தேவையான அளவு ஸ்பெக்டர்ம் கவரேஜ் உடன் உருப்பதாக ஐடியா செல்லுலாரின் தலைவர் குமார மங்கலம் பிர்லா கூறியுள்ளார்.
முகேஷ் அம்பானி
நாங்கள் இந்த ஸ்பெக்டர்ம்களை வாங்கி உள்ளதன் மூலம் எல்லா ஐபி தரவுகளிலும் மிகவும் கம்பீரமான நிலையில் உள்ளோம் இதை வைத்துக் கொண்டு எங்களால் உலகத்தரம் வாய்ந்த சிறப்பான சேவையாய் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
ஏலம்
31 சுற்று வரை நடந்த இந்த ஏலத்தில் 964.8 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்துள்ளதாகவும், ஒவ்வொரு நிறுவனமும் தங்களது தேவைக்கு ஏற்றவாறு காற்றலைகளை வாங்கி உள்ளதாகவும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
700 மெகாஹெட்ஸ் பேண்டு
700 மெகா ஹெட்ஸ் பேண்டு நெட்வொர்க்கின் விலையைக் குறைக்க ஏர்டெல் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. 700 மெகாஹெட்ஸ் பேண்டு மூலம் அதிக தரமான டிஜிட்டல் சேவையை வழங்க இயலும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications