அன்னிய செலவானி இருப்பு 371.99 பில்லியன் டாலராக உயர்வு..!

மும்பை: இந்தியாவின் அன்னிய செலவானி இருப்பு செப்டம்பர் 30ஆம் தேதி முடிவில் 371.99 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 23ஆம் தேதி 370.76 பில்லியன் டாலராக இருந்து நாட்டின் அன்னிய செலவாணி இருப்பு செப்டம்பர் 30ஆம் தேதி 371.99 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அன்னிய செலவானி இருப்பு 371.99 பில்லியன் டாலராக உயர்வு..!

செப்டம்பர் 30ஆம் தேதி படி நாணய இருப்பு 346.71 பில்லியன் டாலராகவும், தங்கத்தின் இருப்பு 21.40 பில்லியன் டாலராகவும், சிறப்புக் கடன் வாயிலான இருப்பு அளவு 1.48 பில்லியன் டாலர் மற்றும் ஐஎம்எப் இருப்பு அளவு 2.38 பில்லியன் டாலராக உள்ளது.

அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்ட நிலையில் இந்திய சந்தையில் இருந்து அதிகளவிலான அன்னிய முதலீடு வெளியேறியது, ஆனால் பெடரல் வங்கி கூட்டத்தின் முடிவில் தனது முடிவை மாற்றியதால் மீண்டும் இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரிக்கத் துவங்கியது.

இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் 7 நாட்களில் அன்னிய முதலீட்டு அளவு சுமார் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவை எட்டியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+