ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் மாதம் முதல் தனது நெட்வொர்க் சேவையை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்கத்துவங்கியது.
இதனைத் தொடர்ந்து இப்போது ஒரே மாதத்தில் 16 மில்லியன் பயனர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

4ஜி சந்தையில் புதிதாக கலம் இறங்கி வேகமாக வளர்ந்து வரும் ஜியோ நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப் போன்ற நிறுவனங்களை விட மிக வேகமாக வளர்ந்து வருவதாக அறிவித்துள்ளது.
அம்பானி மகிழ்ச்சி
ஜியோ வெல்கம் ஆஃபரை இந்திய மக்கள் வரவேற்றதைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். தரவு பயன்பாட்டின் வளர்ச்சி மூலம் ஒவ்வொரு இந்தியரும் பெறும் அளவில் வளர்ச்சி அடைவர் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
உலக சாதனை
செப்டம்பர் 5 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சேவையில் இன்று வரை 16 மில்லியன் பயனர்கள் இணைந்து உள்ளனர்.
இலக்கு
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி 100 மில்லியன் பாயனர்களை எட்டுவதே எங்கள் இலக்கு என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆதார் அட்டை
3,100 நகரங்களில் ஜியோ சிம் பேப்பர் இல்லாமல் ஆதார் அட்டை மூலம் சிம் கார்டுகளை ஆக்டிவேஷன் செய்யும் முறையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
உலகளவில்
4ஜி சேவையில் தனது சோதனை முயற்சியிலேயே 1.5 மில்லியன் பயனர்களுடனும் டாரிப் போருடனும் உலகின் இரண்டாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இந்நிறுவனம் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் நிறுவனமான ஏர்டெல் 275.5 மில்லியன் பயனர்களுடனும், வோடாஃபோன் நிறுவனம் 200 மில்லியன் பயனர்களுடனும், ஐடியா நிறுவனம் 177 மில்லியன் பயனர்களுடனும், ஏர்செல் நிறுவனத்தில் 89.7 மில்லியன் பயனர்களும் உள்ளனர்


Click it and Unblock the Notifications